Prøve GULL - Gratis
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
Dinamani Tirunelveli
|September 01, 2025
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார். ஆனால், இந்திய மக்களாட்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் மட்டுமல்ல; அவரைப் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டினார்கள். இந்தியாவில் மக்களாட்சி என்பதே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுதான். அடுத்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைத்து விடுகிறது.
இதுவே இந்தியாவில் மிகப் பெரிய மக்களாட்சி செயலாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் எழுதினார்கள். காரணம், இந்தியாவில் மக்களாட்சிக் கூறுகள் பரவி வளர்வதற்கான எந்தச் சமூகச் சூழலும் இல்லை என்பதை மேற்கத்திய அறிஞர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். தேர்தல் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் இந்திய மக்களாட்சி சுழல்கிறது. அதைவிட்டு மக்களாட்சியை நகர்த்தும் வல்லமை இந்திய அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தார்கள் இந்த ஆய்வாளர்கள்.
Denne historien er fra September 01, 2025-utgaven av Dinamani Tirunelveli.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் தமிழக அமைச்சர் ஆனந்த் சந்திப்பு
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை, தமிழக அமைச்சர் என். ஆனந்த் வியாழக்கிழமை நள்ளிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.
3 mins
June 13, 2026
Dinamani Tirunelveli
பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
போப்பாண்டவரின் எச்சரிக்கை!
மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.
2 mins
June 13, 2026
Dinamani Tirunelveli
வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா
மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?
'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்
அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
June 13, 2026
Dinamani Tirunelveli
வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு
நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
June 13, 2026
Translate
Change font size

