Prøve GULL - Gratis
தமிழரின் தொன்மையை மறைக்க முயற்சி!
Dinamani Tirunelveli
|June 25, 2025
புணே, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தரம் வாய்ந்த ஆய்வு மையங்களும், அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையமும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கை அளித்துள்ளன.
கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். மேலும், 'கீழடி அகழாய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தகவல்கள், சான்றுகள், கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.
கீழடியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் வைகையாற்றின் தோற்றுவாயிலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரை இரு கரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லியல் ஆய்வு சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை அருகே கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 5,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
முதன்முதலாக செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் சுவடுகள் கண்டறியப்பட்டன. ஓடுகள், உறைக்கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய ஏராளமான பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு பானை ஓட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியரின் சின்னமான மீன் சின்னம் கிடைத்ததால் இது பண்டைய மதுரையாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.
மேலும், அங்கு கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பது நிறுவப்பட்டது. இதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும் என்பதும் வரலாற்றுப்பூர்வமான உண்மைகளாகும்.
1926-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின்போது சிந்து மாநிலத்தில் சர் ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் அதிகாரி நடத்திய அகழாய்வில் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மிகத் தொன்மையான நாகரிகம் இது என்பதை உலகம் உணர்ந்தது. இயற்கை காரணங்களினால் சிந்துவெளி நாகரிகம் அழிந்து 1,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தனர் என்பதையும் உலகம் உணர்ந்தது.
Denne historien er fra June 25, 2025-utgaven av Dinamani Tirunelveli.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள்
உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
நீட் வினாத் தாள் கசிவு: மகாராஷ்டிரத்தில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவர்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்
அமெரிக்கா ஒப்புதல்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
May 20, 2026
Dinamani Tirunelveli
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani Tirunelveli
ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
1 min
May 20, 2026
Translate
Change font size

