Prøve GULL - Gratis
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
Dinamani Thoothukudi
|December 02, 2025
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
பொதுவாக ஒரு பொருள் யாருடையதோ, அவர்களால் மட்டுமே அந்தப் பொருளை பாதுகாக்க முடியும். அதைப் பாதுகாப்பது எப்படி என்பதை உரியவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள்.
வாக்கைப் பாதுகாக்க வாக்காளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். அதையும் வாக்காளர்கள்தான் செய்ய வேண்டும். அதைப் பாதுகாக்க அவர்களுக்குத் தேவையான வாக்கு குறித்த விழிப்பை, அறிவை மக்களுக்கு நல்வழி காட்டும் தலைவர்கள்தான் தரவேண்டும். அந்த விழிப்புணர்வை இதுவரை வாக்காளர்களுக்கு அளித்தோமா என்பதுதான் கேள்வி. இந்த நாட்டில் வாக்கை எந்த அளவுக்கு தரம் தாழ்த்த முடியுமோ அந்த அளவுக்கு நாம் அனைவரும் தரம் தாழ்த்தியுள்ளோம். வாக்களிக்க கூலி கொடுத்தோம். பரிசுகள் கொடுத்து மகிழ்வித்தோம், அதே போல், இன்று அதையே சந்தைப்படுத்தி விற்று வாங்கும் பொருளாக ஆக்கி வைத்துவிட்டோம். வாக்கைச் சீரழித்தது மக்களல்ல, மாறாக அரசியல் கட்சிகள்தான்.
உலகிலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட நாடு, அதிக எண்ணிக்கையில் வாக்குச்சாவடி, அதிக எண்ணிக்கையில் அலுவலர்களை வைத்து தேர்தல் நடத்தும் ஒரே நாடு இந்தியா. அது மட்டுமல்ல, இவ்வளவு எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடும் இந்தியாதான். மக்களாட்சிக்கு எதிரான பல சமூகக் கூறுகள் உள்ள நாட்டில் தேர்தலை நடத்துவதே ஒரு சாதனை என்றுதான் ஆய்வாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தைப் பாராட்டுகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் புனிதத்தை கெடுப்பதும் கட்சிகள்தானே தவிர வாக்காளர்கள் அல்ல. தேர்தல் ஆணையராக இருந்தவர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவிகள் அளித்து அந்தப் பதவிக்கு வருகிறவர்களை தங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கத் தூண்டியதும் ஆட்சியில் இருந்த கட்சிகள்தானே? தேர்தல் ஆணையத்துக்கு ஆணையராக வர விரும்புவோர் 'தங்கள் பதவிக்காலம் முடிந்த பிறகு எந்தப் பதவியும் எங்கும் பெறமாட்டேன்' என்ற உறுதிமொழிப் பத்திரம் தந்தவர்களைத்தான் போட வேண்டும் என்ற சீர்திருத்தத்தைக் கொண்டு வந்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்குமே. இந்த குறைந்தபட்ச சீர்திருத்தத்தைக்கூட ஏன் நம் கட்சிகள் பேச மறுக்கின்றன?
Denne historien er fra December 02, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
376 நிலஅளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 376 நில அளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
நீதித் துறைக்கு சவால் விடும் திமுக அரசு: அதிமுக பொதுக் குழுவில் கண்டனம்
நீதித் துறைக்கு சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு மைக்ரோசாஃப்ட் - தொழிலாளர் அமைச்சகம் ஒப்பந்தம்
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் நல, வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
இண்டிகோ செயல்பாடுகள் மேற்பார்வைக்கு 8 பேர் குழு: டிஜிசிஏ அமைப்பு
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 பேர் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) புதன்கிழமை அமைத்தது.
1 mins
December 11, 2025
Dinamani Thoothukudi
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி வேகமான முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதை நோக்கி, இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருவதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
யுனெஸ்கோ கலாசாரப் பட்டியலில் தீபாவளி பண்டிகை!
இந்தியர்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் புதன்கிழமை (டிச.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி உரியவர்களிடம் திருப்பியளிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
திருவண்ணாமலை தீப மலையில் ஏறிய நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
திருவண்ணாமலையில் மகா தீப தரிசனம் காண தடையை மீறி செவ்வாய்க்கிழமை இரவு மலை மீது ஏறிச் சென்ற நபர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
1 min
December 11, 2025
Dinamani Thoothukudi
மகளிர் டி20: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் கமலினி, வைஷ்ணவி
இலங்கை மகளிர் அணியுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் இந்திய மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
December 10, 2025
Dinamani Thoothukudi
ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் 9 முதல் 16 இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, சிலி, ஜப்பான், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.
1 min
December 10, 2025
Listen
Translate
Change font size
