Prøve GULL - Gratis
நெஞ்சினிலே... நெஞ்சினிலே...
Dinamani Thoothukudi
|November 23, 2025
சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம் குறித்த நினைவலைகளை ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் நிறுவனத் தலைவர் ஏவி.எம். குமரன் பகிர்ந்து கொள்கிறார்.
“ஏவி.எம் நிறுவனரும், தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் ஒருவருமான எங்கள் தந்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் சென்னைக்கு வருவதற்கு முன்பாக காரைக்குடியில் ‘சரஸ்வதி டாக்கீஸ்’ என்ற திரையரங்கை நடத்தியிருக்கிறார். ஏவி.எம் ஸ்டூடியோஸ், ஏவி.எம்.புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றை அவர் தொடங்கியவுடன், சென்னையில் திரையரங்கம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில், 1970-களின் பிற்பகுதியில் ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கப் பணிகளைத் தொடங்கினார்.
ஸ்டூடியோ வளாகத்தில் இருந்த வடபழனி அச்சகத்தின் வியாபாரம் குறைந்து போகவே, அதனை சிறியதாக்கி வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, அச்சகத்தின் பைண்டிங் பிரிவு இருந்த இடத்தில் திரையரங்கம் கட்டுவதற்கு முடிவு செய்தார். அவர் திரையரங்கம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்த இடம் அப்போது சென்னை மாநகர எல்லைக்குள் இல்லை. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்டிருந்தது.
திரையரங்கின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றபோது, அவர் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் அசாத்தியமானது. தினமும் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிடுவார். அங்கேயே தனக்குரிய மேஜையில் அமர்ந்து கொண்டு அனுபவ அறிவின் அடிப்படையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவார். கட்டுமானப் பகுதியில் நிலவிய தூசால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. திரையரங்கைக் கட்டி முடிப்பதற்கு முன்னரே நிமோனியா நோய் காரணமாக அவர் மறைந்துவிட்டார்.
Denne historien er fra November 23, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
அதிகாரமே குறிக்கோள்!
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
2 mins
November 24, 2025
Dinamani Thoothukudi
மாநில நீச்சல்: எஸ்டிஏடி சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்
சென்னை, நவ. 23: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற எஸ் டிஏடி சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென் றது.
1 min
November 24, 2025
Dinamani Thoothukudi
மின் கம்பி அறுந்து விழுந்து தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு
சிதம்பரம், நவ. 23: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
1 min
November 24, 2025
Dinamani Thoothukudi
பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை
கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.
2 mins
November 24, 2025
Dinamani Thoothukudi
காயத்தான்-வாகனத்தான்-அழியான்
தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.
1 min
November 23, 2025
Dinamani Thoothukudi
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,258 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் தங்கக் கையிருப்பின் மதிப்பு கணிசமாக உயர்ந்ததால் 69,258 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
November 23, 2025
Dinamani Thoothukudi
ஏழையின் நடனத்தில் இறைவனைக் காணலாம்!
ஆரம்பத்தில் தயங்கித் தயங்கி என்னிடம் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் நடனத்தில் சிறந்து விளங்கி மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். இப்படி என்னை அழ வைத்த பிள்ளைகள் ஏராளம். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்' என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட கலையை அவர்கள் வெளிப்படுத்தும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதற்குத் தான் இந்தப் பிறவி எடுத்தோம் என்று தோன்றும்\" என்கிறார் பார்வதி ரவி கண்டசாலா.
2 mins
November 23, 2025
Dinamani Thoothukudi
நெஞ்சினிலே... நெஞ்சினிலே...
சென்னை வடபழனியின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து, ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்தது ஏவி.எம். ராஜேஸ்வரி திரையரங்கம். இங்கு 2020-ஆம் ஆண்டில் திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்ட நிலையில், அந்தத் திரையரங்க வளாகம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்களுக்குத் தயாராகி வருகிறது.
2 mins
November 23, 2025
Dinamani Thoothukudi
140 பட்டங்கள்...
இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.
1 min
November 23, 2025
Dinamani Thoothukudi
அறந்தலைப்பிரியா ஆறு எது?
பல வகைகளில் வளர்ச்சி கண்டு முன்னேறியதும் தாராள மனப்பான்மை உடையது இன்றைய சமூகம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால், இப்போதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜாதியுணர்வும் ஆணவமும் தலைதூக்கி நிற்கின்றன. பண்டைய நாள்களில் காதலர்கள் விஷயத்தில் சமூகம் எப்படி நடந்து கொண்டது என்பதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாகக் காணலாம்.
2 mins
November 23, 2025
Listen
Translate
Change font size

