Prøve GULL - Gratis

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூர்வமாக நிரூபணம்

Dinamani Thoothukudi

|

June 20, 2025

விசாரணை அறிக்கையில் தகவல்

புது தில்லி, ஜூன் 19: நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னர் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்று உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தை, அவரைப் பதவி நீக்கம் செய்யும் அளவில் தீவிரமானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்த போது, புது தில்லியில் எண்-30, துளக் கிரசண்ட் முகவரியில் அவர் வசித்த அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டின் பொருள்கள் சேமித்து வைக்கும் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததை மீட்புக்குழுவினர் கண்டறிந்தனர். மறுநாள் அதிகாலையில் அறையில் இருந்து பணம் மாயமானது.

விசாரணைக் குழு: அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தா வாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மார்ச் 22-ஆம் தேதி அமைத்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்

மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.

time to read

1 min

October 10, 2025

Dinamani Thoothukudi

மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்

மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

time to read

1 min

October 10, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.

time to read

1 mins

October 10, 2025

Dinamani Thoothukudi

நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

time to read

2 mins

October 10, 2025

Dinamani Thoothukudi

ஈரோடு நாகமலை குன்று: தமிழகத்தின் நான்காவது பல்லுயிர் பாரம்பரியத் தலம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றை தமிழகத்தின் 4-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thoothukudi

அனுபவத் தலைமையும் அவசியம்!

இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.

time to read

2 mins

October 09, 2025

Dinamani Thoothukudi

இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thoothukudi

பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thoothukudi

சபலென்கா, கெளஃபி வெற்றி

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

time to read

1 min

October 09, 2025

Dinamani Thoothukudi

இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்

time to read

1 mins

October 09, 2025

Translate

Share

-
+

Change font size