Prøve GULL - Gratis

இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு

Dinamani Thoothukudi

|

May 21, 2025

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது.

லண்டன்/பிரெஸ்ஸெல்ஸ்/ஜெருசலேம், மே 20:

இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் பிரிட்டன் நிறுத்திவைத்துள்ளது.

மேலும், இஸ்ரேலுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்காக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

காஸாவில் கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஒப்பந்தம் கடந்த ஜன. 19 முதல் மார்ச் 18-ஆம் தேதி வரை அமலில் இருந்தது.

அப்போது, ஹமாஸின் பிடியில் இருந்த 25 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் சிறைகளில் இருந்த சுமார் 1,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

இருந்தாலும், அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

அதற்குப் பிறகு மட்டும் இஸ்ரேல் தாக்குதலில் 1,563 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் (ஒட்டுமொத்த உயிரிழப்பு 53,573).

அதுமட்டுமின்றி, காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்வதற்கும் இஸ்ரேல் தடை விதித்தது.

காஸாவின் அனைத்து பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இஸ்ரேல் அங்கு தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், தொடரும் உணவுப் பற்றாக்குறையால் காஸா பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துவருகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அன்புள்ள ஆசிரியருக்கு...

சட்டம் இல்லை

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

படித்தால் மட்டும் போதுமா?

அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

பயிற்சியாளர் நெகிழ்ச்சி..

சாம்பியன் கோப்பை வென்ற உணர்ச்சிப் பெருக்கில் இருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், மரியாதை மற்றும் மகிழ்ச்சி நிமித்தமாக ஒருவரின் கால்களை பிடித்த தருணம் பெரிதும் கவனம் ஈர்த்தது. அவர் அமோல் மஜூம்தார். இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர்.

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

எண்மக் கைதுக்கு எதிராக இரும்புக்கர நடவடிக்கை தேவை: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் ரூ.3,000 கோடி மோசடி

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Thoothukudi

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Thoothukudi

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Translate

Share

-
+

Change font size