Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

Dinamani Thanjavur

|

September 12, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, செப். 11:

மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, ஆளுநர் தாமதப்படுத்திய மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.

மேலும், மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பினார். அதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தக்கூடிய விவகாரம் என்பதால் அவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதிமுதல் விசாரணையை அரசியல் சாசன அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி பி.ஆர்.க வாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு ஆதரவாகவும் மத்திய அரசு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில அரசுகள் வாதங்களை முன்வைத்தன.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு எதிராகவும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தன.

FLERE HISTORIER FRA Dinamani Thanjavur

Dinamani Thanjavur

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Thanjavur

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Thanjavur

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Thanjavur

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Thanjavur

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Thanjavur

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Thanjavur

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Thanjavur

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Thanjavur

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Thanjavur

டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Translate

Share

-
+

Change font size