Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்

Dinamani Thanjavur

|

March 11, 2025

செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.

- சுவாமி விமூர்த்தானந்தர்

இன்று செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதனைக் கொண்டு திறமையானவர்கள் இயந்திரத்தனமான வேலைச் சுமையை சர்வ சாதாரணமாகச் செய்து முடிக்கிறார்கள். ஆண்டுக் கணக்கில் நடந்த வேலைகள் எல்லாம் நிமிஷக் கணக்கில் முடிகின்றன.

மிக அதிக அளவிலான தகவல் தொகுப்புகளை அவற்றைப் பற்றிய துல்லிய விவரங்களைச் சேர்த்து கணினியில் ஒரே திரையில் செயற்கை நுண்ணறிவு தருகிறது. இதுபோன்று பல பிரம்மாண்டமான செயல்கள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களைப் பல வகையில் ஏமாற்றுவதற்கும் பயன்படுகிறது. நிதியமைச்சர் பேசாததை அவரே பேசுவது போல் மிகத் தெளிவாக செயற்கை நுண்ணறிவு மூலம் காட்ட முடிகிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது அலாவுதீனின் கையில் உள்ள விளக்கு போல. விளக்கைத் தேய்த்ததும் இட்ட வேலைகளைச் செய்ய பூதம் தோன்றுவதுபோல் செயற்கை நுண்ணறிவு மனிதன் முன்னே வந்து நிற்கிறது. விளக்கைத் தேய்த்துப் பூதத்திடமிருந்து யாருக்கு நன்கு வேலை வாங்கத் தெரியுமோ, அவர்களுக்கு அது வரப்பிரசாதம். பூதத்தைக் கையாளத் தெரியாவிட்டால், அது மனிதனின் கையாலாகாத தனத்தைத் தானே காட்டுகிறது?

செயற்கை நுண்ணறிவு எப்படிச் செயல்படுகிறது என்பதை மாணவர்கள் சிறுவயதிலேயே கற்பது நல்லது. ஆனால் பல மாணவர்கள் சொந்த அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளாமல் செயற்கை அறிவை நம்பி, சுயமான தங்களது திறமைகளை, கற்பனைகளை, சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளாத வெற்று மனிதர்களாகப் போய்விடுகிறார்கள். இது கொடுமையானது.

ஒரு கட்டுரை அல்லது கடிதம் அல்லது பவர் பாயிண்ட் பிரசென்டேஷனைத் தானாகச் செய்யாமல் சாட் ஜிபிடி பின்னே ஓடுகிறார்கள். அசல் சிந்தனைகள் இல்லாத வெறும் தகவல் அறிவு கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். விரைவிலேயே அவர்கள் தொழில்நுட்பம் தரும் சொகுசுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அசல் சிந்தனை இருந்தால்தான் மனிதன் சரியான தகுதியிலும் தரத்திலும் வளர்வான்.

FLERE HISTORIER FRA Dinamani Thanjavur

Dinamani Thanjavur

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு

நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 20, 2025

Dinamani Thanjavur

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Thanjavur

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Thanjavur

மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி

time to read

1 min

December 20, 2025

Dinamani Thanjavur

1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி

மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Thanjavur

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 20, 2025

Dinamani Thanjavur

கலப்படம் தடுக்க புதிய பால் கொள்கை: தமிழக அரசு முடிவு

பாலில் கலப்படத்தை தடுக்க புதிய பால் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Thanjavur

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.

time to read

2 mins

December 20, 2025

Dinamani Thanjavur

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Thanjavur

மன மாற்றமே முதல் வெற்றி

வாழ்க்கையில் வெற்றி என்பது நேராகச் செல்லும் பாதை என்று நாம் பொதுவாக நினைத்துக் கொள்கிறோம்.

time to read

2 mins

December 19, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back