Prøve GULL - Gratis

அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!

Dinamani Tenkasi

|

September 05, 2025

உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.

- இளங்கோ கட்டிமுத்து

ஆண்டுதோறும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5), அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவர் தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். இவர் அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும், தன்பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார்.

தன் முதல் பணியை சென்னை மாநில கல்லூரியில் தொடங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து, நீண்ட காலமாக தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 'சர்' பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு, இவருக்கு 1954-இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய போது, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை, ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாட அனுமதி கோரி அவருடைய மாணவர்கள் அவரை அணுகியபோது, 'எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனது பெருமைக்குரிய பாக்கியமாக இருக்கும்' என்ற கோரிக்கையைப் பரிந்துரை செய்தார். அதன்படி, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ளவர் குரு. நமக்கு இந்த உலகைக் கற்பிக்கும் ஆசான். நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். பெற்றோர் சொல்வதைவிட ஆசிரியர் சொல்வதைத்தான் மாணவர்கள் கேட்பார்கள். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்.

FLERE HISTORIER FRA Dinamani Tenkasi

Dinamani Tenkasi

திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள்: முதல்வர் திறந்துவைத்தார்

'அரண் இல்லம்' எனப்படும் பெயரில் திருநங்கையருக்கு பாதுகாப்பான வாழ்விடங்கள் அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tenkasi

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவிலில் இளைஞரிடம் தங்க நகையைப் பறித்ததாக திருநங்கைகள் 2 பேரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். சங்கரன்கோவில் தற்காலிக பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துள்ளனர் அந்தத் திருநங்கைகள்.

time to read

2 mins

October 14, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tenkasi

செப்டம்பரில் குறைந்தது சில்லறை பணவீக்கம்

காய்கறிகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு பொருள்கள், பழங்கள், பயறு வகைகள், தானியங்கள், முட்டை, எரிபொருள் போன்றவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவின் சில்லறை விலை பணவீக்கம் செப்டம்பரில் 1.54 சதவீதமாக சரிந்துள்ளது. இது 2017 ஜூன் மாதத்துக்குப் பிந்தைய மிகக் குறைந்த பணவீக்கம்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

நெடுஞ்சாலைகள் இணைப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

time to read

1 min

October 14, 2025

Dinamani Tenkasi

சர்வதேச சந்தைகள் பலவீனம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருள்களுக்கு வரும் நவம்பர் 1 முதல் கூடுதலாக 100 சதவீத வரி அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tenkasi

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: அரசுகள் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற் கொள்ளக் கோரியும், அணையை செயலிழக் கச் செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, தமி ழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன் றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tenkasi

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலர்கள் தேர்வு

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் மாநில துணைச் செயலர்களாக ந.பெரியசாமி, எம். ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

time to read

1 min

October 14, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

பிகாரில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெண் வாக்காளர்கள்!

எதிர்வரும் நவம்பர் 6 மற்றும் 11-இல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் பங்கு, அங்கு நிலவி வரும் ஜாதிய ஆதிக்கத்தைவிட மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது.

time to read

2 mins

October 13, 2025

Dinamani Tenkasi

மதிப்புக்கு உரிய மதிப்பு!

ஒரு பொருளின் மெய்யான மதிப்பு எப்போது முழுமையாகத் தெரியும்? 'இப்படி ஒரு கேள்வியை இலக்கியப் பயிலரங்கு ஒன்றில் பங்கேற்பாளர்களிடம் கேட்டேன். விலையைப் பொருத்தது' என்றார் ஒரு மாணவர்.

time to read

3 mins

October 13, 2025

Translate

Share

-
+

Change font size