Prøve GULL - Gratis

நாயைக் கொல்லாத புலி!

Dinamani Salem

|

July 01, 2025

விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. பகை, வன்மம், பழிவாங்குதல் போன்ற தீய குணங்களை மனிதன் விட்டொழித்து அன்பு, பாசம், கருணை போன்ற நல்ல குணங்களைப் பெற்றால் உலகம் உன்னத நிலையை அடையும்.

- முனைவர் இரா.கற்பகம்

சில நாள்களுக்கு முன்பு கேரளம் - தமிழ்நாடு எல்லையில், இடுக்கியில் உள்ள ஒரு ஏலக்காய் தோட்டத்தில், ஓர் ஆழமான குழியில் ஒரு புலியும் நாயும் விழுந்து கிடந்தன. பல மணிநேரம் கழித்துதான் வனத் துறையினர் வந்து அவற்றை மீட்டனர். நாயை வெளியில் விட்டபிறகு, புலியைப் பெரியார் புலிகள் காப்பகத்தில் கொண்டுவிட்டனர். இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் வந்து பலரது கவனத்தை ஈர்த்தது.

அவ்விரண்டு விலங்குகளும் வெகுநேரம் ஒரே குழியில் ஒன்றாகக் கிடந்திருக்கின்றன. இருந்தும், நாயை அந்தப் புலி கொன்று சாப்பிடவில்லை! பொதுவாக சிறுத்தை தான் நாயை வேட்டையாடி உண்ணுமே தவிர, நாயை புலி வேட்டையாடாது. ஏனெனில், நாய் புலியின் இயற்கையான இரை ஆகாது. மான், காட்டெருமை போன்ற பெரிய விலங்குகளே புலியின் இயற்கையான இரையாகும். இரண்டு விலங்குகளுமே உயிர் பயத்தில் இருந்த போது, தப்புவது ஒன்றுதான் அவற்றின் தலையாய கவலையாய் இருந்திருக்குமேயன்றி, உணவைப் பற்றிய கவலை அப்போது இருந்திருக்காது.

விலங்குகள் ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. அவை பசிக்கும்போது மட்டுமே கொல்கின்றன. அதுவும் இயற்கையின் நியதிக்குக் கட்டுப்பட்டே கொல்கின்றன. அந்தப் புலிக்குப் பசி வந்திருக்கலாம்; இருந்தாலும், தன்னுடன் சிக்கிக்கொண்டு, உயிர் பயத்துடன் இருந்த அந்த நாயின் மீது கருணை கொண்டு, அதை ஒன்றும் செய்யாமல் விட்டது. அந்த நாயும் புலியின் கருணையை உணர்ந்து செவ்வனே இருந்தது. ஐந்தாம் அறிவைத் தாண்டி அவை இரண்டும் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றனவோ எனத் தோன்றுகிறது!

மனிதர்களுக்கு ஆறறிவு உள்ளது. ஆனால், வயிற்றுப் பசி, உடற்பசி, கோபம், ஆணவம், பழிவாங்குதல் என்று ஏதேதோ காரணங்களுக்காகக் கொலை, கொள்ளை போன்ற மகாபாதகச் செயல்களைச் செய்கின்றார்களே! தம் ஆறாம் அறிவைக் கொண்டு இத்தகைய துர்க்குணங்களை விட்டொழிப்பதை விட்டுவிட்டு, இயற்கையின் நியதிக்கு மாறான, எண்ணிப் பார்க்கவும் அஞ்சத்தக்க கொடிய செயல்களை சர்வ சாதாரணமாகச் செய்கிறார்களே!

விலங்குகள் திட்டம் வகுத்துக் கொலை செய்வதில்லை. பசிக்கும்போது தன்னை விடச் சிறிய விலங்கை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், மனிதர்கள் சாதுர்யமாகப் பலநாள் திட்டம் வகுத்துக் கொல்கின்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Salem

போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

January 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்

தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Salem

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு

திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தி யாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.

time to read

1 min

January 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

time to read

1 mins

January 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Salem

அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Salem

Dinamani Salem

செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு

கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.

time to read

2 mins

January 11, 2026

Dinamani Salem

மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை

இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.

time to read

1 mins

January 11, 2026

Dinamani Salem

தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்

ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.

time to read

1 min

January 11, 2026

Translate

Share

-
+

Change font size