Prøve GULL - Gratis
மயக்கும் மாயத் திரை!
Dinamani Ramanathapuram & Sivagangai
|November 19, 2025
நாடன் சூர்யாவின் ஒரு கவிதை ஃபேஸ்புக்கில் சட்டென்று என்னை ஈர்த்தது. நிறைய யோசிக்கவும் வைத்தது.
சக மனிதனுக்கு நேரும் வன்முறைகளை சர்வசாதாரணமாகக் கடந்து போய்க் கொண்டிருக்கும் நான்தான் ஒருகாலத்தில் பொம்மையின் கை உடைந்ததற்கு ஒரு வாரம் அழுது இருக்கிறேன்.
பொம்மையின் கை உடைந்ததற்கு அழுத குழந்தை வளர வளர ஏன் இரக்கத்தைத் தொலைக்க ஆரம்பிக்கிறது? மென்மையான அதன் இதயம் எப்படிக் கடினப்பட்டுப் போகிறது? முன்பெல்லாம் வேலியில் போகும் ஓணானைக் கல்லால் அடிப்பது, தட்டான் பூச்சியைக் கயிற்றால் கட்டி இழுப்பது போன்ற அடாவடிகளைச் செய்தார்கள். தற்போதைய பிள்ளைகள் கைப்பேசி வன்முறை விளையாட்டுகளை ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். இவர்களும் பிற உயிர்களை துன்புறுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கைப்பேசி விளையாட்டுகள் வன்முறையை உள்ளடக்கியதாகவோ அல்லது வன்முறையைத் தூண்டுவதாகவோ இருக்கின்றன.
சில வகை விளையாட்டுகளில் வீரர்கள் ஒருவரையொருவர் சுட்டு வீழ்த்திய பிறகு, கடைசியில் நிற்பவர் வெற்றியாளர் ஆவார். தீவிர சண்டை, துப்பாக்கிச் சண்டையை மையமாகக் கொண்ட விளையாட்டை சிறுவர்கள் விரும்பி விளையாடுகிறார்கள். பல விளையாட்டுகள் பயங்கரமான வன்முறையைக் கொண்டவை.
இதனால், வளரும் குழந்தைகள் மன நலன் மற்றும் நடத்தை சார்ந்த பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இது அவர்களது தீவிர கோபம், வன்முறை நடத்தைக்கு வழிவகுக்கிறது. விளையாட அனுமதிக்காத போது பெற்றோருடன் சண்டையிடுகிறார்கள்; பொருள்களைப் போட்டு உடைக்கிறார்கள்; குடும்ப உறுப்பினர்களுடன் வன்முறையாக நடந்துகொள்கிறார்கள். ஒரு விளையாட்டுக்காக தாயை சுட்டுக்கொன்ற அதிர்ச்சியூட்டும் வழக்கு ஒன்று உள்ளது. சிலசிறார்கள் தற்கொலையும் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடப்பதால் மிகுந்த மன அழுத்தம், பதற்றம் மற்றும் மன நோயால் பாதிக்கப்படுகிறார்கள். படிப்பில் கவனம் இருக்காது. அறிவார்ந்த மாணவர்கள்கூட தேர்வில் தோல்வியைத் தழுவுகிறார்கள். மேலும், உடல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மணிக்கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்து விளையாடுவதால் முதுகெலும்பில் தேய்மானம் ஏற்படுவது, முதுகுத்தண்டு வளைவது, நடக்கவும் சிறுநீர் கழிக்கவும்கூட அவதிப்படும் நிலை என பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதிக நேரம் விளையாடுவதால் கைகள், குறிப்பாகப் பெருவிரல் வீங்கி வலி உண்டாகிறது. கண்ணில் வறட்சி, கிட்டப் பார்வை கோளாறுகள் வருகின்றன. தூக்கம் பாதிக்கப்படுகிறது.
Denne historien er fra November 19, 2025-utgaven av Dinamani Ramanathapuram & Sivagangai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Ramanathapuram & Sivagangai
Dinamani Ramanathapuram & Sivagangai
ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை
தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min
December 04, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
1 mins
December 03, 2025
Listen
Translate
Change font size
