Prøve GULL - Gratis
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்
Dinamani Pudukkottai
|October 05, 2025
அந்த மாணவரின் கையில் விலங்கிட்டு ஆங்கிலேய அரசின் போலீஸார் மதுரை ஆரப்பாளையம் சிறையிலிருந்து நடத்தி, வைகையின் வடகரையிலிருந்த மதுரை மாவட்ட ஆட்சியரின் முன் கொண்டு நிறுத்தினர். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்ட அந்த மாணவரை அலிபுரம் சிறையில் 60 நாள்கள் அடைக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் தடை விதித்தது.

அவர் மீண்டும் மதுரைக் கல்லூரி மூலமாக பட்டப் படிப்பை முடித்து, திருச்சி புனித வளனார் கல்லூரியில் ஹானர்ஸ் படித்தார். 1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுகலையில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.
1952-இல் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்து, 1961-இல் கரூர் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தன்னுடைய மென்மையான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்தார். அவருடைய பணியைப் பாராட்டி இந்திய ஆட்சிப் பணியை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கியது.
1967 ஜூலை 1-இல் எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு கையில் விலங்கிட்டு நிறுத்தப்பட்டாரோ, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக மாடிப் படிகளில் ஏறி, ஆட்சியர் அறையில் அமர்ந்து பணியாற்றத் தொடங்கினார். அவர்தான் ‘காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன்' என்ற வள்ளுவர் வாக்குக்கு வாழும் உதாரணமாயிருக்கும் லட்சுமிகாந்தன் பாரதி.
2025 அக்டோபர் 4-இல் தன்னுடைய 99 வயதை முடித்து, அக். 5-இல் தன்னுடைய நூறாவது அகவையை தொடங்குகிறார் இவர். இவருக்கு 2024-ஆம் ஆண்டில் தினமணி சார்பில் 'பாரதியார் விருது' வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 'பாரதி' என்ற பட்டப் பெயருடன் விளங்கும் குடும்பங்கள் இரண்டு. இவ்விரு குடும்பத்தின் மூல புருஷர்களுக்கும் 'பாரதி' பட்டத்தை வழங்கி கௌரவித்தவர் அன்றைய எட்டயபுரம் மகாராஜா. ஒருவர் சுப்ரமணிய பாரதி, மற்றொருவர் லட்சுமிகாந்தன் பாரதியின் தாய்வழித் தாத்தா சோமசுந்தர பாரதி. இருவருமே எட்டயபுரத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். நான் சட்டப் பேரவை உறுப்பினராக அன்றைய அமைச்சர் ராஜாராமுடன் குற்றாலத்திலிருந்து தென்காசிக்கு வந்து கொண்டிருந்தபோது, 'பாரதி நகர்’ என்ற பெயரைப் பார்த்தவுடன், "இது யார் பெயர் தெரியுமா?" என்கிறத் தகவலைச் சொன்னார் அமைச்சர்.
Denne historien er fra October 05, 2025-utgaven av Dinamani Pudukkottai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025

Dinamani Pudukkottai
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025

Dinamani Pudukkottai
விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'
'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
1 min
October 09, 2025
Dinamani Pudukkottai
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Dinamani Pudukkottai
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Dinamani Pudukkottai
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Pudukkottai
அனுபவத் தலைமையும் அவசியம்!
இந்திய அரசியல் சூழலில், இன்றைய இளைய தலைமுறையினர், தாங்கள் விரும்பும் முடிவுகளை விரைவாக அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில், பாரம் பரியமான அரசியல் குருநாதர்களையும், அனுபவமிக்க மூத்த தலைவர்களையும் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வரு கிறது. இது விரைவான வளர்ச்சிபோல் தோன்றினாலும், நாட்டின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கும் ஆபத்தான போக்காகவே அமையும்.
2 mins
October 09, 2025
Dinamani Pudukkottai
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025
Dinamani Pudukkottai
வீடு திரும்பினார் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
1 min
October 08, 2025
Dinamani Pudukkottai
4-ஆவது தினமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்
முக்கிய வங்கி பங்குகளின் உயர்வு மற்றும் உள் நாட்டு முதலீட்டு நிறுவனங் கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது ஆகியவை காரண மாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் முன்னேற்றம் கண்டன.
1 min
October 08, 2025
Translate
Change font size