Prøve GULL - Gratis
காலிஸ்தான் பயங்கரவாதத்தின் நெடிய நிழல்!
Dinamani Pudukkottai
|June 27, 2025
காலிஸ்தான் தனிநாடு கோரி கனடாவில் இயங்கிவரும் சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் அமைதியைச் சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன.
1985, ஜூன் 23-இல் ஏர் இந்தியா-182 ‘கனிஷ்கா’ விமானம் லண்டன் வழியாக புது தில்லி, மும்பையை இறுதி இலக்காகக் கொண்டு கனடாவின் மான்ட்ரியால் நகரிலிருந்து புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் 31,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறந்தபோது வெடித்துச் சிதறியது. சரக்குகள் வைக்கும் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து விமானத்தில் இருந்த 329 பேர் உயிரிழந்தனர்; இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் உள்பட கனடா குடிமக்கள் 268 பேர், பிரிட்டனைச் சேர்ந்த 27 பேர், 22 இந்தியர்கள், விமான ஊழியர்கள் என அதில் பயணித்த யாரும் உயிர்பிழைக்கவில்லை.
2001 செப்டம்பர் 11 நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முந்தைய மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். கனடா வரலாற்றிலேயே மிகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.
அந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில் மற்றொரு ஏர் இந்தியா விமானத்தை இலக்கு வைத்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் நரிட்டா விமான நிலைய சரக்குச் சேமிப்பகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தவறுதலாக முன்கூட்டியே வெடித்து இரு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இந்த இரு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாகப் பின்னர் நடைபெற்ற விசாரணையில், காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னிறுத்தி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் சீக்கியப் பிரிவினை அமைப்பான ‘பப்பர் கல்சா’ இருந்தது தெரியவந்தது.
Denne historien er fra June 27, 2025-utgaven av Dinamani Pudukkottai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
தில்லியில் அமித் ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் வியாழக்கிழமை இரவு சந்தித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Pudukkottai
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Pudukkottai
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
பாஜக தேசியத் தலைவராகிறார் நிதின் நவீன்!
பாஜக தேசிய செயல் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டவரும் அக்கட்சியின் உயரிய பொறுப்பை வகிக்கும் இளம் தலைவராகவும் அறியப்படும் நிதின் நவீன் (45), இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
1 mins
January 09, 2026
Dinamani Pudukkottai
வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Pudukkottai
திண்டுக்கல்லில் தம்பதி வெட்டிக் கொலை
திண்டுக்கல்லில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலைக்குப் பழிக்குப் பழியாக பிணையில் வெளியே வந்தவரும், அவரது மனைவியும் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1 min
January 09, 2026
Translate
Change font size
