Facebook Pixel முறைகேடுகளுக்கு வேண்டும் முடிவு! | Dinamani Pudukkottai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

முறைகேடுகளுக்கு வேண்டும் முடிவு!

Dinamani Pudukkottai

|

May 27, 2025

போட்டித் தேர்வுகள் என்பது மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்க வேண்டும். 12 ஆண்டுகள் பள்ளிகளில் பயின்று மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அதைக் கணக்கில் கொள்ளாமல், சில மணிநேர தேர்வை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வது நியாயமா என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை.

- உதயகுமார் மு.வீரையன்

இந்திய அளவில் உயர்நிலைக் கல்வியில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழகக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை கல்வியை முன்னேற்றப் பயன்படும் என்றாலும், மாணவர்களின் நோக்கம் மருத்துவப் படிப்பிலேயே இருக்கிறது.

வெற்றிபெற வேண்டுமென்ற இலக்கு இருக்குமானால் எந்தத் துறையிலும் சிகரத்தைத் தொடமுடியும். ஆனால், மருத்துவம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று எண்ணி தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்றுதான் கூறவேண்டும். கல்வியாளர்களின் அறிவுரை மாணவர்களிடம் சென்று சேர்ந்ததாகத் தெரியவில்லை.

மருத்துவக் கனவுக்கு ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும் என்பதை மத்திய அரசு விடாப்பிடியான கொள்கையாகக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இதற்கு ‘விலக்கு’ அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது. என்றாலும், இதுவரை இதற்கு முடிவும், விடிவும் ஏற்படவில்லை.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கடந்த மே 4 அன்று நடைபெற்றது. தேர்வு மைய நுழைவாயிலில் காவல் துறையினரும், தேர்வை நடத்தக்கூடிய தேசிய தேர்வு முகமை சார்பில் நியமிக்கப்பட்ட பணியாளர்களும் தீவிர சோதனைகள் நடத்தினர்.

கடந்த ஆண்டு (2024) வினாத்தாள் கசிவு விவகாரம் இன்னும் முடியவில்லை. வழக்குகள் தொடர்கின்றன. முறைகேடுகளும் குறைபாடுகளும் தொடர்கின்றன.

இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வில் (நீட்) முறைகேட்டில் ஈடுபட்டதாக 2024-25 கல்வியாண்டில் இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேர்ந்த 14 மாணவர்களின் சேர்க்கையை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்துசெய்து ஆணையிட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய மேலும் 26 எம்.பி.பி.எஸ். மாணவர்களை உடனடி இடைநீக்கம் செய்யவும் என்எம்சி உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Pudukkottai

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்

ராகுல் கடும் விமர்சனம்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்

நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

மனநிலை மாற வேண்டும்!

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Pudukkottai

நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 12, 2026

Translate

Share

-
+

Change font size