Prøve GULL - Gratis
அவசர ஊர்திகளுடன் போராடும் நோயாளிகள்
Dinamani Puducherry
|July 08, 2025
‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் பொருந்தும்.
வீடுகள் அல்லது விபத்துத் தலங்களிலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தீவிர நோயாளிகளாயினும், உயர் மருத்துவ சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைகளிலிருந்து பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற நோயாளிகளானாலும் சரி, அவர்களைச் சுமந்து செல்ல அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) எடுத்துக்கொள்ளும் மணித்துளிகளுள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமானதாகும். எனவேதான், எந்தப் போக்குவரத்து நெரிசலிலும், அவசர ஊர்திகள் தடையின்றிச் செல்வதற்கு வழிவிடப்படுகிறது.
மக்கள்தொகையும் பெருகி, மருத்துவமனைகளும் அதிகரித்துவிட்ட இன்றைய காலச்சூழலில் நமது சாலைகளில் முன்பைவிட அதிகமான எண்ணிக்கையில் அவசர ஊர்திகளை நாம் காண்கிறோம். அதே சமயம், பிற சேவைத் துறைகளைப் போன்று, மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாகிய இந்த அவசர ஊர்தி சேவைகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய குறைபாடுகள் சில இருக்கவே செய்கின்றன.
கடந்த வாரம் உதகை மாவட்டம், குன்னூரில் வேகத் தடை மீது ஏறி இறங்கிய அவசர ஊர்தியின் பின்பக்கக் கதவு திறந்துகொள்ள, அதிலிருந்த நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்தார். அதைப் பின்தொடர்ந்து வந்த வாகனங்கள் சட்டென்று நின்றதால், அவ்விடத்தில் பெரிய விபத்து எதுவும் நிகழ்வது தவிர்க்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் கூச்சலிட்டு ஆம்புலன்ஸை நிறுத்தச் சொன்ன பிறகே அதன் ஓட்டுநருக்கு நடந்த விஷயம் புரிந்திருக்கிறது.
Denne historien er fra July 08, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Puducherry
அன்பின் வழியது உயிர்நிலை
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
2 mins
October 30, 2025
Dinamani Puducherry
டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு
2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Puducherry
அன்புள்ள ஆசிரியருக்கு...
காந்தியத்தைப் பின்பற்றுவோர் பழைமைவாதிகள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் ('புதிய தலைமை மலர்கிறது!'-கட்டுரை-க. பழனித்துரை, 22.10.25). காந்தியம் மரணிக்கவில்லை. கோபிசெட்டிபாளையத்தில் அதற்கு விதை ஊன்றப்பட்டு துளிர்த்து வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. காந்தியவாதிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பின்பற்றினால் புதிய வெளிச்சம் கிடைத்து நவீன பாதை தென்படும். அவர்கள் அரசியலுக்கும் வந்து, தங்கள் பங்களிப்பை அளிப்பது இன்றியமையாதது. சீர்கெட்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் அனைத்துக் கட்டங்களிலும் சீர்திருத்தம் தேவை. அது காந்தியத்தால் முடியும். எனவே காந்தியத்தை நவீன இந்தியாவுக்கான சூத்திரமாக பயன்படுத்தி தீர்வு காணலாம்.
1 min
October 30, 2025
Dinamani Puducherry
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
2 mins
October 30, 2025
Dinamani Puducherry
அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.
1 min
October 29, 2025
Dinamani Puducherry
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Puducherry
தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி
தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Puducherry
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Puducherry
தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.
1 min
October 29, 2025
Translate
Change font size

