Prøve GULL - Gratis
தமிழர் பெருமையைப் பறைசாற்றும் கீழடி!
Dinamani Puducherry
|July 03, 2025
வரலாறுகள் அறியப்பட்டவரை சுமேரிய நாகரிகம்தான் நீண்ட மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது.
இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் இருந்து பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு ஆதாரபூர்வமான வரலாற்றுத் தடயங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. விந்திய மலைக்குக் கீழே வாழும் தக்காணப் பீடபூமியில் வாழ்பவர்கள் மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் உலகத்துக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லப்படும் தொல்பொருள் ஆய்விடம்தான் கீழடி.
கீழடியில் கிடைத்த 6 கரிம மாதிரிகள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக, அமெரிக்காவின் ப்ளாரிடோவில் உள்ள பீட்டா அனலிடிகல் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி அந்தப் பொருள்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-ஆவது ஆண்டையும், 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205-ஆவது ஆண்டையும் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரு மட்டங்களுக்குக் கீழேயும், மேலேயும் பொருள்கள் இருப்பதால் கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரை என்று தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.
இவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, தொல் தாவரவியல், மூலக்கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல்தொல்லியல் மற்றும் மொழியியல் தொல்லியல் ஆகிய துறைகளின் வல்லுநர்களும் இவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. ஆகவே, கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல இரண்டாவது நகர நாகரிகம் இங்கு நிகழவில்லை என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால், கீழடியில் கிடைத்த பொருள்களை வைத்து கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரிகம் தொடங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும், இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் உருவாகியுள்ளது.
கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
Denne historien er fra July 03, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு
திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 mins
January 05, 2026
Dinamani Puducherry
வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Puducherry
வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை
கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
1 mins
January 05, 2026
Dinamani Puducherry
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Puducherry
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Puducherry
பொங்கல் பரிசுத் தொகுப்பு: தலைவர்கள் வரவேற்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.
1 min
January 05, 2026
Dinamani Puducherry
கடலூர் மத்திய சிறையில் கைதி தற்கொலை
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
January 05, 2026
Dinamani Puducherry
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
January 05, 2026
Dinamani Puducherry
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Dinamani Puducherry
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Translate
Change font size
