Prøve GULL - Gratis
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
Dinamani Perambalur & Ariyalur
|October 11, 2025
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
-

இதுதொடர்பாக அந்தப் பரிசுக்கான தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
உலக நாடுகளில் ஒப்பீட்டளவில் மக்களாட்சி நாடாக வெனிசுலா வளமாக இருந்தது. தற்போது அது எதேச்சதிகார நாடாக மனிதத்தன்மைக்கு எதிரான நெருக்கடியாலும், பொருளாதார சிக்கலாலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் காரிருள் சூழ்ந்து வரும் வேளையில், மக்களாட்சியின் சுடரை அணையாமல் பாதுகாத்து அமைதிக்காகப் பாடுபட்டு வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.
அந்நாட்டில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடைபெற வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் குரல் எழுப்பத் தொடங்கினார். நாட்டு மக்களின் சுதந்திரத்துக்காக அவர் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
அந்நாட்டில் சுதந்திரமாக தேர்தல் நடைபெற வேண்டும், பிரதிநிதித்துவ அரசு அமைய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் பொது நோக்கமாக உள்ளது. அந்தக் கட்சிகள் ஒரு காலத்தில் ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் சக்தியாக மரியா உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அவர் எதிர்க்கட்சிகளின் அதிபர் வேட்பாளராக இருந்தார். ஆனால், அந்நாட்டு அரசு அவரைப் போட்டியிடவிடாமல் தடுத்துவிட்டது.
Denne historien er fra October 11, 2025-utgaven av Dinamani Perambalur & Ariyalur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Perambalur & Ariyalur
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது
சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
October 10, 2025

Dinamani Perambalur & Ariyalur
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Perambalur & Ariyalur
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Perambalur & Ariyalur
பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்
முதல்வர் வேட்பாளர் நிதீஷ் குமார்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவிப்பு
2 mins
October 09, 2025
Dinamani Perambalur & Ariyalur
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025

Dinamani Perambalur & Ariyalur
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Perambalur & Ariyalur
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Translate
Change font size