Facebook Pixel தீவு மீட்பல்ல தீர்வு! | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தீவு மீட்பல்ல தீர்வு!

Dinamani Perambalur & Ariyalur

|

September 11, 2025

இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சிக்கு அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விசைப் படகில் கச்சத் தீவுக்கு சென்றார் இலங்கை அதிபர். இந்தியா கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்ட நிலையில், அங்கு சென்றுள்ள முதல் இலங்கை அதிபர் திசாநாயகதான்.

குடியிருப்புகள் எதுவும் இல்லாத, புதர்கள் அடர்ந்த தரிசு நிலமான கச்சத் தீவில், புனித அந்தோணியார் ஆலயமும், கடற்படை அலுவலகமும் மட்டுமே உள்ளன. குடிக்க தண்ணீர்கூட கிடையாது. சுமார் 1.15 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள தீவின் மீதான இலங்கையின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்வதுதான் அவரது பயணத்தின் நோக்கம்.

“அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து நமது கடல் பகுதியைப் பாதுகாக்க வேண்டும். நமது மீனவர்களுக்கு கச்சத் தீவு மிகவும் முக்கியமான ஒரு பகுதி. கச்சத் தீவைப் பற்றிய விவாதம் (மீண்டும்) ஏற்பட்டுள்ளது. நமது நிலம், தீவு, கடல் பகுதி மற்றும் வான் பகுதியை எதிர்காலச் சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டியது எனது கடமை” என்று கச்சத் தீவில் அவருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளிடம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் இலங்கை அதிபர்.

இலங்கையின் சுற்றுலா வழித்தடத்தில் இல்லாத நெடுந்தீவிலிருந்து சுமார் 14.5 கி.மீ. தொலைவில் உள்ள கச்சத் தீவை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட குருக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்: நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

மணிப்பூர்: குகி கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி சமூகத்தினர் வாழும் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Perambalur & Ariyalur

இறுதிச் சுற்றில் ஆண்ட்ரீவா

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா வியாழக்கிழமை தகுதிபெற்றார்.

time to read

1 min

June 05, 2026

Translate

Share

-
+

Change font size