Prøve GULL - Gratis
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
Dinamani Nagapattinam
|November 03, 2025
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
உரல், உலக்கை, திருகை, ஆட்டுக்கல், அம்மி, அச்சாணி போன்றவை அருங்காட்சியகத்தில் மட்டுமே இன்றைக்குக் காணக் கூடியனவாக உள்ளன. இன்னும் அறியப்படாத பல பொருள்கள் இலக்கியங்களிலே சுட்டப்பட்டிருக்கின்றன. அவை பொருளாக மட்டுமின்றி சமுதாயத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன; அவற்றுள் ஒன்றுதான் கோல் என்னும் கருவி.
கோல் என்பதற்கு மரத்தாலான கழி என்பதுதான் இயல்பான பொருள். அடிப்படையில் அவை அளவினைச் சுட்டுகின்ற அளவுகோலாகத்தான் அறியப்பட்டன. அதைத்தான் நாம் இன்றைய காலத்தில் 'ஸ்கேல்' என்கிறோம். அடிக்கோல் மாறி 'அடிஸ்கேல்' ஆகிப்போனது.
கோலில் பல வகைகள் உண்டு. ஊன்றுகோல், அளவைக்கோல், துலாக்கோல், தீக்கடைக்கோல் என்னும் ஞெலிகோல், தலைக்கோல், எழுதுகோல், அரசர்கள் கரத்திலிருக்கும் செங்கோல் வரையிலும் அவை நீள்கின்றன.
இலக்கியங்களிலும் பல இடங்களில் கோல் குறித்துச் சுட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ஔவையார் தான் குறிப்பிடுகிற 'வரப்புயர' என்னும் பாடலில் ‘குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கோன் உயர்வான்' என்கிறார். திருவள்ளுவரும் சில குறள்களில் வெவ்வேறு பொருளில் கோலினைக் குறிக்கிறார். அவற்றுள் 'சமன்செய்து சீர்தூக்கும் கோல்' என்னும் அது எந்தக் கோலாக இருக்கும்?
ஏனென்றால் இத்தனை கோல்களும் சமுதாய வளர்ச்சியை அடையாளம் காட்டுகிற சான்றுகோல்களாக விளங்குகின்றன.
கடவுள் தொடங்கி அருளாளர்கள் வரையிலும் இந்தக் கோலைப் பற்றியிருக்கிறார்கள் என்பதை இலக்கியங்களில் அறிய முடிகிறது.
தன் செங்கரங்களால் வடித்த வேலினை எடுத்துப் பகையரசரைத் துரத்தும் பணியைச் செய்யும் கோமானான கோபாலன், கோலினை எடுத்துப் பசுக்களை (புல்லாங்குழலாகிய கோலெடுத்து ஆன்மாக்களையும்) வசப்படுத்துவதிலும் வல்லவனாக விளங்குகிறான் என்று ஒரு பாடலும் உண்டு.
முருகனின் கையில் பொதுவாக வேல் தான் இருக்கும். அதனாலேயே வேலாயுதன் என்ற பெயரும் பெற்றவன். ஆனால் பழங்கால சித்தர் மரபுகளிலும், தண்டம் என்னும் கோல் கைக்கொண்ட முருகன் வடிவம் உண்டு. முருகன் துறவுபூண்டு எல்லா அணிகலன்களையும் நீக்கிக் கோலை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டான். இந்தக் கோல் அவனுடைய தவப் பெருமையையும் ஒடுக்கத்தையும் குறிக்கிறது.
Denne historien er fra November 03, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
3 mins
November 03, 2025
Dinamani Nagapattinam
அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.
1 min
November 03, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Nagapattinam
வாரிசுகளின் கடமை
அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
2 mins
November 03, 2025
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Listen
Translate
Change font size
