Prøve GULL - Gratis
தவறு திருத்தப்படுகிறது!
Dinamani Nagapattinam
|September 10, 2025
சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
ஆர். வெங்கட்ராமனுக்குப் பிறகு அந்தப் பதவியை அலங்கரிக்க இருக்கும் தமிழர் என்கிற பெருமைக்குரியவராகிறார் அவர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எண்ணிக்கைப் பலத்தின் அடிப்படையில் அந்த அணியில் இல்லாத சிலரும் அவரது வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியிருப்பதில் இருந்து, கட்சி அரசியலைக் கடந்த அவரது செல்வாக்கு வெளிப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக 452 வாக்குகளும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியின் சார்பாகப் போட்டியிட்ட உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவாக 300 வாக்குகளும் பதிவாயின. நாடாளுமன்ற இரு அவைகளில் மொத்தம் உள்ள 788 எம்.பி.க்களின் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 781; அவர்களில் 767 எம்.பி.க்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர்.
அந்த 767 பேரிலும் 15 வாக்குகள் செல்லாதவை என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இரண்டு அணிகளும் அத்தனை உறுப்பினர்களையும் உட்கார வைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது போல எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் கூட 15 உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாதவை என்றால், நம்மால் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் தகுதியும், திறனும் கேள்விக்குறியாகிறது.
Denne historien er fra September 10, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Nagapattinam
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வியாழக்கிழமை வென்றது.
1 min
October 10, 2025
Dinamani Nagapattinam
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் ஜோகோவிச், வாசெராட்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மொனாகோவின் வாலென்டின் வாசெராட் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 mins
October 10, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் வியாழக்கிழமை (அக். 9) மோதுகிறது.
1 min
October 09, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025

Dinamani Nagapattinam
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025
Dinamani Nagapattinam
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Translate
Change font size