Prøve GULL - Gratis
கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து
Dinamani Nagapattinam
|August 09, 2025
தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளர்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
-
சென்னை, ஆக. 8:
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு: தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டிருப்பது பிற மாநிலங்களுக்கு பெரும் நம்பிக்கை தரும் செயல்பாடு. மாநிலத்தின் மொழியான தமிழும், தேவையின் அடிப்படையிலில் ஆங்கிலமும் என்ற அடிப்படையில் இருமொழிக்கொள்கை அரசின் மொழிக் கொள்கையாக இருக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேல்நிலைப் பள்ளி படிப்பில் இரண்டாம் ஆண்டு மட்டுமே வாரியத் தேர்வு இருக்கும் என்பதும் வளர்ந்த குழந்தைகளின் உளவியலை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள நியாயமான நடவடிக்கை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமச்சீர் கல்விக் கோட்பாட்டுக்கு நேரெதிராக மாதிரிப் பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் என்ற அடிப்படையில் பள்ளிக் கல்விக் கட்டமைப்பில் உள்ள பாகுபாடு, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உறுதி செய்யவில்லை. இத்தகைய கட்டமைப்பு சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் எதிரானது.
நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவது கற்றல், கற்பித்தல் செயல்பாட்டுக்கு அடிப்படைத் தேவையாகும். இதுகுறித்து கொள்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. ஆசிரியர்கள் அல்லாத தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் பள்ளிச் செயல்பாட்டில் தலையிடுவது சரியல்ல. மக்கள் செலுத்தும் வரியில் இருந்து கட்டணமில்லாக் கல்வியை அனைவரும் பெறுவதே கண்ணியமிக்க வாழ்வுரிமை.
Denne historien er fra August 09, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
தமிழக ஆட்சி அகற்றப்படுவது உறுதி
தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்படுவது உறுதி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பேருந்தில் தீ
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 3இல் நிறுத்தப்பட்டிருந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ஷட்டில் பேருந்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீப்பிடித்ததாக ஐஜிஐ காவல் சரக துணை ஆணையர் விசித்ரா வீர் தெரிவித்தார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு
வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவை: இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு இலவசம்
'ஓபன் ஏஐ' நிறுவனம் தனது பிரத்யேக 'சாட்ஜிபிடி கோ' சந்தா சேவையை இந்திய பயனர்களுக்கு ஓராண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
ஜார்க்கண்ட்: மாவோயிஸ்டுகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து சிறுமி உயிரிழப்பு
ஜார்க்கண்ட் மாநில வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்து 10 வயது பழங்குடியின சிறுமி உயிரிழந்தார்.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...
இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.
3 mins
October 29, 2025
Dinamani Nagapattinam
புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து
குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடுடன் 'டிரா' செய்தது நாகாலாந்து
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை 'டிரா' ஆனது.
1 min
October 29, 2025
Dinamani Nagapattinam
தமிழில் மட்டுமே பேசுவோம்!
மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.
3 mins
October 28, 2025
Translate
Change font size

