Prøve GULL - Gratis
ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!
Dinamani Nagapattinam
|July 28, 2025
கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.
ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.
ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.
ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்ட சோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.
திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.
Denne historien er fra July 28, 2025-utgaven av Dinamani Nagapattinam.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Dinamani Nagapattinam
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
2 mins
January 11, 2026
Dinamani Nagapattinam
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Nagapattinam
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Dinamani Nagapattinam
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Nagapattinam
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Nagapattinam
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Nagapattinam
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்
அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
1 mins
January 11, 2026
Dinamani Nagapattinam
தேசிய குத்துச்சண்டை: சர்வீசஸ் சாம்பியன்
ஆதித்ய பிரதாப் 60-65 கிலோ பிரிவில் 3-2 என ஹிமாசலின் அபினாஷை வீழ்த்தி தங்கம் வென்றார்.
1 min
January 11, 2026
Dinamani Nagapattinam
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Translate
Change font size
