Prøve GULL - Gratis
'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...
Dinamani Madurai
|June 13, 2026
சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.
அதாவது, 'செல்வந்த நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வந்த காலம் முடிந்துவிட்டது. அமெரிக்காவுக்கு தேவை கூட்டாளிகளே தவிர, பாதுகாப்புக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் நாடுகள் அல்ல. கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட கூட்டணிகளையே அமெரிக்கா விரும்புகிறது. ஒருவர் மூலம் பலனடைந்துவிட்டு, அதற்குப் பதிலாக எதையும் திருப்பி அளிக்க மறுப்பதை ஏற்க முடியாது. ஒரு கூட்டணியின் வலிமை என்பது அதில் உள்ள நாடுகளின் எண்ணிக்கையால் அன்றி, படை அமைப்புகளின் எண்ணிக்கையால் அளவிடப்படுகிறது. மாநாடுகளை நடத்துவதைவிட போர் திறனே தேவை' என்று கூறினார்.
இந்தச் சூழலில், ஆக்கஸ் என்றழைக்கப்படும் ஆங்கிலோ-சாக்சன் ராணுவக் கூட்டணி (ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா இடம்பெற்றுள்ள கூட்டணி) 'க்வாட்' கூட்டமைப்பை (இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ள கூட்டமைப்பு) எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்பதே தற்போதைய கேள்வி.
கடந்த 1920-ஆம் ஆண்டில் இந்திய, பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பிராந்தியத்துக்கு கார்ல் ஹௌஸோஃபர் என்ற ஜெர்மானிய புவி அரசியல் அறிஞர் முதன்முதலில் புவியியல் வடிவம் அளித்தார். காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகள், ஆங்கிலோ- அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அவரின் பார்வையாக இருந்தது. அவரின் பார்வைக்கும், தற்போதைய 'க்வாட்' கூட்டமைப்புக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. தற்போதைய இந்திய-பசிபிக் கருத்தாக்கத்தை உருவாக்கி பெயரிட்டவர் முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே.
கடந்த 2006, செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், இந்திய நாடாளுமன்றத்தில் 'இரு கடல்களின் சங்கமம்' என்ற தலைப்பில் ஷின்ஸோ அபே உரையாற்றினார். அந்த உரையில், 'இந்தியப் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் ஒன்றோடொன்று இணைந்த ஒரே உத்திசார்ந்த கடற்பரப்பாக கருதப்பட வேண்டும்' என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அந்தப் பரப்பில் சுதந்திரமும் செழிப்பும் ஒன்றக்கொன்று வலுசேர்க்கும் வகையில் வளரவேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. இந்தக் கண்ணோட்டமே பின்னாளில் 'க்வாட்' கூட்டமைப்பின் தத்துவ அடித்தளமாகவும், அதைத் தாங்கி நிற்கும் முக்கியச் சிந்தனையாகவும் மாறியது.
Denne historien er fra June 13, 2026-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் ஒரே நாளில் 926 பேர் இடமாற்றம்
தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரே நாளில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர் என மொத்தம் 926 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
June 14, 2026
Dinamani Madurai
ஐரோப்பிய யூனியனில் உக்ரைன், மால்டோவா நாடுகளைச் சேர்க்க நாளை முதல் பேச்சுவார்த்தை
ரஷியாவுடனான போர் தொடர்ந்து வரும் நிலையிலும், உக்ரைன் மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய யூனியனில் (ஐ.யூ.) இணைப்பதற்கான பேச்சுவார்த்தை லக்ஸம்பர்க்கில் வரும் திங்கள்கிழமை முதல் அதிகாரபூர்வமாகத் தொடங்கவுள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Madurai
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Madurai
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 பேர் கைது
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 14 நாள்களில் 4,469 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
June 14, 2026
Dinamani Madurai
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Madurai
ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
1 min
June 14, 2026
Dinamani Madurai
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Madurai
இந்திய மாலுமிகள் உயிரிழப்பு விவகாரம் அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசி வழியில் ஜெய்சங்கர் கண்டனம்
அமெரிக்க கடற்படை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், தொலைபேசி வழியில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சனிக்கிழமை கண்டனத்தைப் பதிவு செய்தார்.
1 min
June 14, 2026
Dinamani Madurai
மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 14, 2026
Dinamani Madurai
கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைக்கால இரும்பு உலைக் கலன்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில் பண்டைய கால தமிழர்களின் திறனைப் பறைசாற்றும் இரும்பு உலைக் கலன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
1 min
June 14, 2026
Listen
Translate
Change font size

