Facebook Pixel குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்: தீர்ப்பு ஒத்திவைப்பு

Dinamani Madurai

|

September 12, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் மீதான 10 நாள்கள் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, செப். 11:

மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உரிய முடிவு எடுக்கவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஆளுநர் காலம் தாழ்த்தியது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு, ஆளுநர் தாமதப்படுத்திய மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியது.

மேலும், மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரும் வகையில் 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பினார். அதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தக்கூடிய விவகாரம் என்பதால் அவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதிமுதல் விசாரணையை அரசியல் சாசன அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி பி.ஆர்.க வாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு ஆதரவாகவும் மத்திய அரசு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில அரசுகள் வாதங்களை முன்வைத்தன.

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டதற்கு ஆதரவாகவும், குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டதற்கு எதிராகவும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தன.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்

இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வழிகளை 'பிரிக்ஸ்' கண்டறிய வேண்டும்

இந்தியா வலியுறுத்தல்

time to read

2 mins

May 15, 2026

Dinamani Madurai

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

கேரளத்தின் புதிய முதல்வர் வி.டி.சதீசன்

நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் அறிவிப்பு

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

காலிறுதியில் சிந்து, லக்ஷியா சென்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, லக்ஷியா சென் உள்ளிட்டோர் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

எம்பிபிஎஸ் அங்கீகாரம்: உறுதியளிப்பு சான்று அளிக்க அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்துக் கொள்வதற்கு வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபார்ம்) மருத்துவக் கல்லூரிகள் வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

கேஜரிவால் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக அவதூறு பதிவுகளை வெளியிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா, துர்கேஷ் பாடக், சஞ்சய் சிங், சௌரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா வியாழக்கிழமை தொடங்கினார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Madurai

விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு

மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 15, 2026

Translate

Share

-
+

Change font size