Prøve GULL - Gratis
மக்களாட்சியின் தாய் இந்தியா!
Dinamani Madurai
|August 06, 2025
இந்தியாவின் மக்களாட்சி கடன் வாங்கப்பட்ட ஆடை அல்ல என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வது அவசியம். அது கூட்டாக முடிவு எடுக்கும் பூர்விக பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளதுடன், நீதிநெறி, சமத்துவம், குடிமக்களின் பங்கேற்பு ஆகிய விழுமியங்களில் நங்கூரமிட்டுள்ளது.
கடந்த ஜூலை 27-ஆம் தேதி பண்டைய கோயில் நகரமான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் மோடி வந்தார். அரசனும், அவனின் ஆட்சியும் சட்டத்துக்கு மேலானது அல்ல என்று கடந்த 1215-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'மேக்னா கார்ட்டா' என்கிற பிரிட்டன் சாசனத்துக்கு முன்பே, அத்தகைய நடைமுறை இந்திய மக்களாட்சியில் இருந்ததாக பிரதமர் மோடி கூறினார். இதன்மூலம், மறந்துபோன வரலாற்று உண்மையை அவர் நினைவுபடுத்தினார்.
தனது பேச்சின்போது அவர் பெருமிதம் தெரிவித்த பண்டைய வாக்குப் பதிவு முறை என்பது என்ன? அது 1,000 ஆண்டுகளுக்கு முன்னர், சோழர்கள் ஆட்சியில், குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் வியக்கத்தக்க பாணியை விவரிக்கிறது. அதேவேளையில் பூர்விகமாகவும், தொன்மையாகவும், கடுமையான விதிமுறைகளையும் கொண்டிருந்த மக்களாட்சி மரபின் பெருமையை மீட்டெடுப்பதே அதில் உள்ள ஆழமான செய்தியாகும்.
இதுகுறித்து 10 ஆண்டுகளுக்கு முன்னர், 'அன் அன்டாக்குமென்டன்ட் வண்டர்-தி மேக்கிங் ஆஃப் தி கிரேட் இண்டியன் எலெக்ஷன் (2014)' என்ற எனது நூலில் நான் எழுதியிருந்தேன். மக்களாட்சிகோட்பாடு என்பது இந்தியாவுக்கு முற்றிலும் புதிதல்ல; கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அது இந்தியாவில் பல்வேறு வடிவங்களில் இருந்தது. சிறிய சமுதாயங்கள், கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் சமூகங்களில் விவாதங்கள் மூலம், முடிவு எடுப்பதில் பங்குகொள்வது இயல்பான வழக்கமாக இருந்தது.
கிராம சபைகளின் பங்கு குறித்தும், இந்தக் கட்டமைப்புகள் மூலம் எவ்வாறு நாட்டை மேலும் திறம்பட ஆட்சி செய்வது என்பதையும் கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் விவரித்துள்ளார். அந்தக் காலத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு சொத்து மற்றும் கல்வி முக்கியத் தகுதிகளாக கருதப்பட்டன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என்று வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. ஒருவர் ஊழலில் ஈடுபட்டதாகவோ, கறைபடிந்தவர்களாகவோ, ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டதாகவோ கருதப்பட்டால், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
Denne historien er fra August 06, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Madurai
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025
Translate
Change font size