Prøve GULL - Gratis
வானம் வசப்படும் வேளை
Dinamani Madurai
|June 27, 2025
இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு நேற்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து புதியதொரு வரலாறு படைத்திருக்கிறது.
-
'ஆக்ஸியம்-4' திட்டத்தின் கீழ் 'டிராகன்' விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கான பயணத்தை நோக்கிய அந்தக் குழுவின் முதல் வெற்றி இது.
'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'ஃபால்கன் 9' ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் பல தடைகளையும் சோதனைகளையும் கடந்து இலக்கை எட்டியிருக்கிறது. கடந்த மே மாதம் திட்டமிடப்பட்ட இந்த முயற்சி விண்கலப் பாதையில் நிலவிய மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, விண்கலத்தை ஏவுதலில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் ஆறு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இப்போது முதல்கட்டம் வெற்றிகரமாக முடிந்து அடுத்தகட்டத்துக்குச் செல்ல இருக்கிறார்கள் விண்வெளி வீரர்கள்.
சுமார் 60 பல்வேறு சோதனைகளை விண்வெளியில் மேற்கொண்டு பிறகு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப இருக்கிறார்கள். விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியபோது 'ஜெய்ஹிந்த்', 'ஜெய் பாரத்' என்று இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா முழங்கியது பழைய நினைவுகளைக் கிளறியது.
1984-இல் அன்றைய சோவியத் யூனியனின் 'சோயுஸ்' விண்கலத்தில் முதன்முறையாக விண்வெளிப் பயணத்தை மேற்கொண்ட முதலாவது இந்தியர் ராகேஷ் சர்மா. விண்வெளியில் இருந்து பூமிப் பந்தைப் பார்த்த அவரிடம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, 'அங்கிருந்து பார்க்கும்போது நமது இந்தியா எப்படி இருக்கிறது?' என்று கேட்டார். 'ஸாரா ஜஹான் ஸே அச்சா' (உலக நாடுகளில் எல்லாம் அழகானது) என்று அவர் தெரிவித்ததை இப்போது நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.
Denne historien er fra June 27, 2025-utgaven av Dinamani Madurai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Madurai
Dinamani Madurai
அன்புள்ள ஆசிரியருக்கு...
நெருங்கிய தொடர்பு
1 mins
October 24, 2025
Dinamani Madurai
ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்?
'ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
1 mins
October 24, 2025
Dinamani Madurai
வியர்வை சிந்தும் வேலர்!
முருகப்பெருமானைக் காண பாதயாத்திரை மூலமாகவும் மலை ஏறியும் வியர்க்க வியர்க்க வரும் பக்தர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்க முடியும்.
1 mins
October 24, 2025
Dinamani Madurai
'ரீல்ஸ்'களுக்குப் பின்னால்...!
பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞர்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈர்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் 'ரீல்ஸ்' என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பார்க்கச் செய்கிறது.
2 mins
October 24, 2025
Dinamani Madurai
ராகு - கேது தோஷம் போக்கும் தலம்
அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.
1 mins
October 24, 2025
Dinamani Madurai
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு
சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.
1 min
October 24, 2025
Dinamani Madurai
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.3,680 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.3,680 குறைந்து ரூ.92,320-க்கு விற்பனையானது.
1 min
October 23, 2025
Dinamani Madurai
சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
October 23, 2025
Dinamani Madurai
முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 3% வளர்ச்சி
இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி செப்டம்பரில் 3 சதவீதமாக உள்ளது. இது ஆகஸ்டில் பதிவான 6.5 சதவீத விரிவாக்கத்தை விடக் குறைவாகும்.
1 min
October 23, 2025
Dinamani Madurai
புதிய டிஜிபி பட்டியல்: தமிழக அரசு ஏற்க மறுப்பு
புதிய டிஜிபி நியமனத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) பட்டியலை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளதாக மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
1 mins
October 23, 2025
Translate
Change font size

