Facebook Pixel ஒருமனதாக தீர்மானம் தேவை! | Dinamani Madurai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஒருமனதாக தீர்மானம் தேவை!

Dinamani Madurai

|

May 20, 2025

பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும், அவர்களது பயிற்சி முகாம்களையும் முற்றிலும் அழித்தொழிக்கும் இலக்குடன் இந்தியா மேற்கொண்ட ‘சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நமது முப்படைகளின் உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

- நா.குருசாமி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்தார்.

அதோடு, இது விஷயத்தில் நமது முப்படைகளும் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அவர் அனுமதியும் அளித்தார். இதையடுத்து, நமது ராணுவத்தினர் நீண்ட ஆலோசனைகள், திட்டமிடலுக்குப் பிறகு, அண்மையில் நடத்திய அதிதுல்லியத் தாக்குதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டன.

இந்த ராணுவ நடவடிக்கையில் முக்கிய பயங்கரவாதிகள் சிலரும் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தினர் மிகவும் கட்டுக்கோப்பாக பயங்கரவாதிகளின் இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாக பெரும் ஊக்கமும், ஆதரவும் அளித்து வரும் பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் அப்பாவி மக்களைக் குறிவைத்து ஆளில்லா ட்ரோன்கள், பீரங்கிகள், ஏவுகணைகளைக் கொண்டு கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.

FLERE HISTORIER FRA Dinamani Madurai

Dinamani Madurai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இதுவரை இல்லாத வகையில் ரூ. 182 கோடி மதிப்பிலான 'ஜிஹாதி போதைப் பொருள்' என்றழைக்கப்படும் கேப்டகன் போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வெள்ளைக் குள்ளன்

இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Madurai

நகை ஏலத்துக்கு தடை கோரி மனு: ரிசர்வ் வங்கி மண்டல அலுவலர் பதிலளிக்க உத்தரவு

நகை ஏலத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Madurai

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'நீட்' வினாத்தாள் விவகாரம்: பெண் விரிவுரையாளர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சேர்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளர் மனீஷா குருநாத் மந்தாரே சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size