Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

Dinamani Karur

|

September 13, 2025

காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.

- பெ.கண்ணப்பன்

தமிழ்நாடு காவல் துறையின் அடுத்த தலைமை இயக்குநர் யார்? என்பது தொடர்பான விவாதங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த சூழலில், காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வதற்குப் பதிலாக, பொறுப்பு தலைமை இயக்குநரை தமிழ்நாடு அரசு சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்துள்ளது.

இந்திய மாநிலங்கள் பலவற்றிலுள்ள காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வதில் கடந்த காலத்தில் நிலவிவந்த குளறுபடிகளைக் களைந்து, தலைமை இயக்குநர் நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் 2006-ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.

காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளிவிட்டு, பொறுப்பு தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டதற்கான காரணத்தை அரசு வெளியிடவில்லை. இருப்பினும், இதன் பின்னணியில் உள்ள அரசியலை காவல் துறையினர் மட்டுமன்றி பொதுமக்களும் உணர்கின்றனர்.

காவல் துறைக்கு தலைமை இயக்குநர் நியமனம் செய்வது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை சில வடமாநிலங்கள் பின்பற்றாமல், தமிழ்நாடு காவல் துறைக்கு பொறுப்பு தலைமை இயக்குநர் நியமனம் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதை நியாயப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர்.

காவல் துறை நிர்வாகம் என்பது இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால், காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதா? என்ற ஐயம் பொதுவெளியில் எழுகிறது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி மாநில காவல் துறையின் தலைமை இயக்குநர் நியமனமானது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டுதான் செய்யப்பட வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பின்பற்றாமல், பொறுப்பு தலைமை இயக்குநரை நியமனம் செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்ற காரணத்தால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Karur

Dinamani Karur

அன்புள்ள ஆசிரியருக்கு...

நடுத்தர மக்களின் வளர்ச்சி

time to read

1 min

October 31, 2025

Dinamani Karur

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Karur

இரட்டைப் பெருமை!

பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Karur

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Dinamani Karur

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Karur

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Karur

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Karur

டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Karur

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

2 mins

October 30, 2025

Dinamani Karur

Dinamani Karur

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

time to read

1 min

October 29, 2025

Translate

Share

-
+

Change font size