Prøve GULL - Gratis
இந்தியா-ரஷியா 5 ஆண்டு பொருளாதார திட்டம்
Dinamani Kanyakumari
|December 06, 2025
பல்துறை ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு
-
இந்தியா - ரஷியா இடையேயான பொருளாதார, வர்த்தக உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 5 ஆண்டு பொருளாதாரத் திட்டத்தை தில்லியில் நடைபெற்ற ஆண்டு உச்சி மாநாட்டில் இரு நாடுகளும் உறுதி செய்துள்ளன.
உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் அதிக கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய இறக்குமதி பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியுடன் மொத்தம் 50 சதவீத வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வரும் நிலையில், இரு நாடுகளிடையேயான இந்த 5 ஆண்டு பொருளாதாரத் திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆண்டு மாநாட்டில், 2030-ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு பொருளாதார திட்டத்தை இரு நாடுகளும் இறுதி செய்ததோடு, சுகாதாரம், போக்குவரத்து, மக்கள் பரிமாற்றம் என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையொப்பமாகியுள்ளன.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியா-ரஷியா 23-ஆவது ஆண்டு மாநாட்டில் பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று விரிவான பேச்சுவார்த்தை மேற்கொண்ட பிறகு, இரு தலைவர்கள் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டறிக்கையில், இந்தியா-ரஷியா இடையே 80 ஆண்டுகளாக நீடித்து வரும் நட்புறவை இருதலைவர்களும் குறிப்பிட்டதோடு, அந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த உறுதி தெரிவித்தனர். இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, வரி மற்றும் வரியில்லா வர்த்தகத் தடைகளுக்கு தீர்வு காணவும், சரக்கு போக்குவரத்தில் உள்ள தடைகளை நீக்கவும் இருதரப்பில் உறுதியேற்கப்பட்டது.
எரிசக்தி, போக்குவரத்து, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு, விண்வெளி துறை ஒத்துழைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சுற்றுலா, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதியேற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் ரஷிய ராணுவ வன்பொருள் தயாரிப்பு:
இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான ரஷிய ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளைப் பராமரிக்க, அந்நாட்டின் ராணுவ வன்பொருள் மற்றும் உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு ரஷியா ஒப்புக் கொண்டுள்ளது.
Denne historien er fra December 06, 2025-utgaven av Dinamani Kanyakumari.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Kanyakumari
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Kanyakumari
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Kanyakumari
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Kanyakumari
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Kanyakumari
குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்
'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2 mins
May 29, 2026
Dinamani Kanyakumari
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Kanyakumari
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Dinamani Kanyakumari
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Kanyakumari
பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 25,000 கோடியாக அதிகரிப்பு!
பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வருவாய், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 2 நிதியாண்டுகளில் சுமார் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.25,000 கோடியை எட்டியுள்ளது.
1 min
May 29, 2026
Listen
Translate
Change font size

