Prøve GULL - Gratis
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
Dinamani Kanyakumari
|November 28, 2025
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
25 ஆண்டுகளில் முதல் முறையாக, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) நியூஸிலாந்திடம் கடந்த ஆண்டு நவம்பரில் இழந்தது இந்தியா. சரியாக ஓராண்டிலேயே, மீண்டும் அதே போன்ற முழுமையான தோல்வியை தற்போது தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்திருக்கிறது. இந்தியா தனது மண்ணிலேயே ஒரு டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது இது 3-ஆவது முறை.
இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா வென்றது என்பதை விட, இந்தியா தானாகவே தோல்வியை நோக்கி சறுக்கியது என்றால் பொருத்தமாக இருக்கும். தொடரை முழுமையாக வெல்வோம் என எதிர்பார்க்கவில்லை என்று தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா கூறும் அளவுக்கு, சவாலே இல்லாமல் தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு வாரிக் கொடுத்திருக்கிறது இந்திய அணி.
சர்வதேச களத்தில் சவால் மிக்கதாக இருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட எந்த அணியாக இருந்தாலும், இந்தியாவை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் சந்திக்கும்போது தடுமாறிப் போனதுதான் வரலாறு. 'ஒயிட்வாஷ்' என்ற முழுமையான வெற்றி மூலமாக, அந்த அணிகளையுமே இந்தியா அடக்கியாண்டதுண்டு.
அவற்றில் எல்லாம் இந்தியாவின் பிரம்மாஸ்திரம், 'ரேங்க் டர்னர்கள்' எனப்படும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்தான். எனவே, சொந்த மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் வெற்றிகளில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியமாக இருந்திருக்கின்றனர்.
தென்னாப்பிரிக்க தொடரில் நிகழ்ந்ததும் அதுதான். ஆனால், வெற்றியின் பக்கம் தென்னாப்பிரிக்காவும், அதைப் பெற்றுத் தந்தவர்களாக அதன் சுழற்பந்துவீச்சாளர்களும் இருந்ததுதான் வித்தியாசம். 'எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே திருப்பி அடிப்பது' என்பதை இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா செய்து காட்டிவிட்டது.
Denne historien er fra November 28, 2025-utgaven av Dinamani Kanyakumari.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Kanyakumari
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!
தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.
2 mins
December 01, 2025
Dinamani Kanyakumari
ஆசியாவில் பலம் வாய்ந்த நாடுகள் பட்டியல்: முக்கிய சக்தியாக உருவெடுத்தது இந்தியா
பொருளாதாரம், ராணுவ பலம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிய கண்டத்தில் பலம் வாய்ந்த நாடுகளாகத் திகழும் 'ஆசியா பவர் இண்டெக்ஸ் -2025' பட்டியலில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Kanyakumari
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Kanyakumari
வெற்றியின் முகவரி பணமா?
மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
2 mins
December 01, 2025
Listen
Translate
Change font size

