Prøve GULL - Gratis
அதிகாரமே குறிக்கோள்!
Dinamani Kanchipuram
|November 24, 2025
ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.
ஆரிய, திராவிட இனவாதம் பேசுவோர் அதில் எந்த ஆராய்ச்சியையும் செய்ததில்லை. பிரிட்டிஷார் நம்மைப் பிரித்தாள்வதற்காகப் பயன்படுத்திய சூழ்ச்சி, தங்களுக்கும் சாதகமாக இருப்பதால் இவர்களும் பயன்படுத்துகின்றனர். ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் பாரத தேசத்தில் எந்த நாளிலும் இருக்கவில்லை என்று மேதைமை நிறைந்த அம்பேத்கர் தெளிவுபடுத்தினார். ஆனாலும், திராவிடர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதோடு தமிழர்கள் மீதும் அத்தகைய வண்ணத்தைப் பூசிவிடும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள்.
திராவிடர்கள்- ஆரியர்கள் என்ற பாகுபாட்டை தமிழ் இலக்கியங்கள் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில்கூட ஆரிய என்ற சொல் இடம்பெறுகிறதே அன்றி திராவிடர் என்ற சொல் இல்லை. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கும் பிரதேசங்களைக் குறிப்பிட மொழி, பெயர், தேயம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர திராவிடர் என்ற சொல் கிடையாது.
தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் 'திராவிடம்' என்ற பாகுபாட்டை மறுக்கின்றனர்; தமிழர்களை திராவிடர் என்று அடையாளப்படுத்துவதை எதிர்க்கின்றனர். ஆனால், ஒரு சிலர் ஆரியர்கள் என்று ஒரு பிரிவினரை வசைபாடி அவர்கள் மீது வரலாற்றுப் பிழைகளை ஏற்றுவது போல், இவர்கள் தெலுங்கர்கள் மீது வெறுப்புணர்வை விதைக்கின்றனர்.
மொத்தத்தில் திராவிட அரசியலோ, தமிழ் தேசிய அரசியலோ தமிழர்களின் பெருமைகளை வளர்ச்சியை வரலாற்றை விட்டுவிட்டு ஒரு பிரிவினரைக் குற்றஞ்சாட்டி இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாகவே நடந்து கொள்கின்றன. வெறுப்பு அரசியலை மக்கள் மனங்களில் விதைத்து தங்களுக்கான வாக்குவங்கியை உறுதி செய்வதில் கவனமாக இருக்கின்றனர்.
Denne historien er fra November 24, 2025-utgaven av Dinamani Kanchipuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
இங்கிலாந்துடனான மகளிர் டி20 யஸ்திகா, ஜெமிமா, நந்தினி அசத்தலில் இந்தியாவுக்கு முதல் வெற்றி
மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min
May 30, 2026
Dinamani Kanchipuram
கார்ல்செனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 போட்டியாளரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
பக்ரீத்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் வியாழக்கிழமை (மே 28) பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Kanchipuram
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
சேவைக் குறைபாடும் வாடிக்கையாளர்களும்...
இணையத்தின் வரவால் இன்று நாம் பல வசதிகளை அறிதிறன்பேசி மூலம் பெற்று வருகிறோம்.
2 mins
May 29, 2026
Dinamani Kanchipuram
பிகாரில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்
பிகார் மாநிலத்தில் படகு கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 4 பேரைத் தேடும் பணி நடைபெறுகிறது.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
அமைதிப் பேச்சுவார்த்தை உள்பட போர் நிறுத்த முன்னெடுப்புகள் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
சின்னர், ரைபகினா அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிச், ஆண்ட்ரீவா முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்.
1 min
May 29, 2026
Dinamani Kanchipuram
அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...
அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
2 mins
May 28, 2026
Listen
Translate
Change font size

