Prøve GULL - Gratis

இந்தியா வெறும் கல்விச் சந்தையல்ல!

Dinamani Kanchipuram

|

August 20, 2025

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியச் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், தங்கள் சொந்த நாட்டின் பாடத்திட்டங்களை அப்படியே இங்கே திணித்தால், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் அறிவு மரபுகளையும், தனித்துவமான கலாசார செழுமையையும் அவை புறக்கணிக்கக்கூடும்,

- ஸ்ரீவாஸ் சகஸ்ரநாமம்

பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள கிஃப்ட் சிட்டி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற இந்திய பெருநகரங்களில் தங்கள் வளாகங்களை அமைக்கும் திட்டங்கள், இந்திய உயர் கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளன. உலகளாவிய கல்வி மையமாக உருவெடுக்கும் இந்தியாவின் லட்சிய பயணமாக எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த நோக்கம் மிகவும் பாராட்டுக்குரியது என்றாலும், இதில் சில முக்கியக் கவலைகள் உள்ளன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் நாடுகளில் உலகளாவிய புகழ் பெற்றிருப்பதற்குக் காரணம், அங்கே இது ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. அதேநேரம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் இந்திய வருகை, ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்புகிறது. இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்கள் இந்திய மாணவர்களுக்கு அறிவைப் போதிக்கும் இடங்களாக மட்டுமே இருக்குமா? அல்லது இந்தியக் கல்வி முறையிலிருந்தும், நமது கலாசாரத்திலிருந்தும் அவர்களும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வார்களா? அதாவது, இருதரப்புக்கும் பரஸ்பரம் கற்றுக்கொள்ளும் தளமாக அவை மாறுமா? என்பதுதான் அது.

இந்திய உயர் கல்வித் துறையில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் காலடி வைப்பதற்கு வழிவகுத்த பின்னணியிலிருந்து தொடங்குவது, இந்த புதிய அத்தியாயத்தின் நோக்கத்தையும் தாக்கத்தையும் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும். உலகத் தரவரிசையில் சிறந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்கலாம் என்ற தொலைநோக்குத் திட்டத்தை 2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2023-இல் இதற்கான விரிவான விதிமுறைகளை வகுத்தது.

இந்த விதிமுறைகளில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சில முக்கியச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், அவை தங்கள் சொந்த நாட்டு வளாகங்களில் வழங்கும் பட்டங்களுக்குச் சமமான பட்டங்களை இந்தியாவிலும் வழங்க முடியும். மேலும், ஊழியர்களை நியமிப்பது, நிதி நிர்வாகம் மற்றும் கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற முக்கிய விஷயங்களில் அவற்றுக்குக் கணிசமான தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

Dinamani Kanchipuram

Denne historien er fra August 20, 2025-utgaven av Dinamani Kanchipuram.

Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.

Allerede abonnent?

FLERE HISTORIER FRA Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

பஞ்சமி நிலத்தை அரசு மீட்டுத்தர தவறினால் பறிமுதல் செய்வோம்

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanchipuram

அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanchipuram

ஆசனூர் அருகே வாகனத்தில் உணவு தேடிய யானை

ஆசனூர் அருகே சாலையில் சென்ற வாகனத்தில் யானை உணவைத் தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanchipuram

எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு

மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanchipuram

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Kanchipuram

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanchipuram

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanchipuram

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanchipuram

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை

இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanchipuram

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 குடம் பாலபிஷேகம்

வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தர்ம ஸ்தாபனம் சார்பில், 1,008 பால் குடம் ஊர்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size