Prøve GULL - Gratis
வேலூரும், ஜூலை 10 புரட்சியும்!
Dinamani Kanchipuram
|August 15, 2025
வேலூர்
லூர் கோட்டைக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இங்குதான் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி இந்தியச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்ட நாளாகும்.
‘குள்ள நரியாக 100 ஆண்டுகள் வாழ்வதைவிட புலியாக ஒரே ஒரு நாள் வாழ சம்மதம்’ என்றவர் திப்பு சுல்தான். பீரங்கிகளாலும், துப்பாக்கிகளாலும் ஆங்கிலேயர்களைப் போரில் எதிர்கொண்ட திப்பு பலமுறை அவர்களைத் தோற்கடித்தார். எனினும் ஆங்கிலேயர்களால் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டனர். திப்புவின் 12 மகன்களும் 6 மகள்களும், பணியாளர்களும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 370 ஆங்கிலேயச் சிப்பாய்களும் 1,500 இந்தியச் சிப்பாய்களும் காவல் காத்தனர். இவர்களில் ஹிந்து, முஸ்லிம்கள் இருந்தனர்.
ஆங்கிலேயர்கள் இந்திய சிப்பாய்களை நடத்திய முறை வெப்பத்தை உருவாக்கியது. ‘சிப்பாய்கள் காதில் கடுக்கண் அணியக் கூடாது. நெற்றியில் குங்குமமோ, விபூதியோ பூசக் கூடாது. தாடி வளர்க்கக் கூடாது. தலைப்பாகையாகப் புதுவகைத் தொப்பி அணிய வேண்டும்’ என்று கெடுபிடி செய்தனர். புதிதாகத் தரப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களில் மாடு, பன்றியின் கொழுப்புச் சேர்க்கப்பட்டிருந்ததாகச் செய்தி உலவியது. இதனால், ஹிந்து, முஸ்லிம் என இரு தரப்புச் சிப்பாய்களும் ஆவேசம் அடைந்தனர். இந்தக் காலத்தில் ராணுவ முகாம்களில் ‘பக்கீர்கள்’ என்ற பெயரில் புரட்சியாளர்கள் இருந்தனர். அவர்கள் மதச் சாமியார்கள் வேடத்தில் பொம்மலாட்டக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஆங்கிலேயர் இறுதியில் தோற்பது போல் காட்சிகள் இருந்தன. விடுதலை உணர்வின் திரிக்கு இதுவும் தீ மூட்டியது.
Denne historien er fra August 15, 2025-utgaven av Dinamani Kanchipuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
பஞ்சமி நிலத்தை அரசு மீட்டுத்தர தவறினால் பறிமுதல் செய்வோம்
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்
இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
ஆசனூர் அருகே வாகனத்தில் உணவு தேடிய யானை
ஆசனூர் அருகே சாலையில் சென்ற வாகனத்தில் யானை உணவைத் தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு
மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Kanchipuram
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாணனுக்காக அங்கம் வெட்டிய லீலை
இன்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
1 min
September 01, 2025
Dinamani Kanchipuram
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமிக்கு 1,008 குடம் பாலபிஷேகம்
வல்லக்கோட்டை தெய்வீக சத்திய தர்ம ஸ்தாபனம் சார்பில், 1,008 பால் குடம் ஊர்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size