Prøve GULL - Gratis
மாறும் உலகில்... மாறாத போர்கள்...
Dinamani Kanchipuram
|July 12, 2025
மக்களும், நாடுகளும் இப்போதும் இரு அடிப்படை விதிகளைக் கொண்டே நிர்வகிக்கப்படுகின்றன. இவை 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொள்கைகள். அவை, முதலில் நாட்டு நலனுக்கு முன்னுரிமை அளிப்பது, அடுத்து அதிகாரத்தை முறையாகப் பகிர்வது மற்றும் பிற நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப இணைந்து செயல்படுவது.
உலகின் தற்கால நிகழ்வுகள் குறித்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறைமை மடிந்துவிட்டனவா? இல்லை புதிதாக ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்படவே இல்லையா? நாம் இன்னும் கற்கால உலகில்தான் இருக்கிறோமா? இல்லையென்றால் 17, 18-ஆம் நூற்றாண்டில் இருந்த பழைய நிலைக்குத் திரும்புகிறோமா? என்பவைதான் அவை.
இப்போது 5 கண்டங்களில் ஒரே நேரத்தில் சண்டை நடைபெறுவதை உலகம் அச்சத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச வர்த்தகக் கட்டமைப்பைச் சீர்குலைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட செயலால் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வர்த்தகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
2022, பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹூதி, ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதுதவிர, கடந்த 30 ஆண்டுகளாக சீனா பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. 26 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார்கில் போருக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு பெரிய மோதலை நடத்தியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா பூமியைத் துளைத்து தாக்கும் குண்டுகளை வீசியுள்ளது.
ஐரோப்பாவில் அச்சு இயந்திரத்தின் வருகை அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவை மனித நேய இயக்கங்களுக்கு வலுவூட்டின. அந்தக் காலகட்டத்தில் எழுந்த நவீன சிந்தனைகளைப் போன்ற எழுச்சி இப்போதும் இந்த நேரத்திலும் நமக்கு அவசியமாகிறது.
1648-ஆம் ஆண்டு வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் மூலம் ஐரோப்பாவில் நீடித்து வந்த '30 ஆண்டு போர்' மற்றும் '80 ஆண்டு போர்' ஆகியவை முடிவுக்கு வந்தன. இதன்பிறகு, 17-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரான்ஸ் தலைமை அமைச்சரான கார்டினல் டி ரிச்செலியூ ஒவ்வொரு நாடும் அதனதன் தேச நலன்களுக்காக மட்டும் செயல்படுவது என்ற கருத்தை முன்வைத்தார். இது மோதல்களைத் தவிர்க்க வழிவகுத்ததுடன், அதிகாரச் சமநிலை, நாடுகள் இடையே ஒத்துழைப்பு, கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்க முதல்படியாக அமைந்தது.
பின்னர், இது டச்சு நாட்டைச் சேர்ந்த மனிதநேய ஆர்வலரும் பல்துறை வல்லுநருமான ஹ்யூகோ க்ரோடியஸால் புதிய கருத்தாக்கமாக உருவாக்கப்பட்டது.
Denne historien er fra July 12, 2025-utgaven av Dinamani Kanchipuram.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு
உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.
1 mins
May 15, 2026
Dinamani Kanchipuram
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Kanchipuram
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Kanchipuram
மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
1 min
May 15, 2026
Dinamani Kanchipuram
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Kanchipuram
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Kanchipuram
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Kanchipuram
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Kanchipuram
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Kanchipuram
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Translate
Change font size
