Prøve GULL - Gratis

‘தீபாவளி பரிசு’ கிடைக்க...

Dinamani Erode & Ooty

|

September 10, 2025

ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?

- முனைவர் வைகைச்செல்வன்

சரக்கு, சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவற்றில் இரண்டடுக்கு சரக்கு சேவை விகித முறை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. 12%, 28% அடுக்குகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. 5%, 18% என இரண்டு புதிய விகிதங்கள் நீண்ட நாள் ஒரு முடிவை எட்டப்படாமல் இருந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்பட்டிருக்கிறது. இவற்றில் சில வரவேற்புகளும், இந்த மாற்றத்தினால் ஏதோ அரசியல் இருப்பதாக எதிர் முகாமும் மாறி மாறி தங்கள் விவாதங்களை வைத்திருக்கிறது.

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருள்கள் மீதான வரிக் குறைப்பு வரவேற்கத்தக்கது என்றும் ஒருசாராரும், சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டது என்றும் எதிர்க்கட்சிகளும் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ஜிஎஸ்டி வரியில் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசைத் தூண்டியது எது? மந்தமான பொருளாதார வளர்ச்சியா?, வீட்டுக் கடன் அதிகரிப்பா?, வீட்டுச் சேமிப்பு குறைவதா?, பிகார் தேர்தலா?, டிரம்ப்பின் வரி விதிப்பா அல்லது இவை அனைத்துமா என்று காங்கிரஸ் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை முழுமனதுடன் வரவேற்கின்றனர் மத்திய அரசின் ஆதரவுத் தரப்பினர். இருந்த போதிலும் மாநில வருவாய், மாநில நிதி சுயாட்சி பாதுகாப்பு குறித்து மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இப்படி எதிரும், புதிருமான இந்தச் சீர்திருத்தத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் மீதான வரிகளைக் குறைத்திருப்பதன் மூலம் ஏழை எளியவர்களின் பணச்சுமை குறைந்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடமுடியாது.

FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Erode & Ooty

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Erode & Ooty

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Erode & Ooty

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Erode & Ooty

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Erode & Ooty

தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 mins

November 01, 2025

Dinamani Erode & Ooty

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Erode & Ooty

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Erode & Ooty

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size