Prøve GULL - Gratis
இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!
Dinamani Erode & Ooty
|May 15, 2025
இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் தெளிவான மற்றும் உறுதியான மாற்றத்தை பிரதமர் மோடி முன்வைத்தார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ஆயுதப்படைகள் அண்மையில் நடத்திய துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தி தரப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை அவர் தெளித்தெளிவாக எடுத்துரைத்தார்.
இனி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்பதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' புதிய அணுகுமுறையையும், கொள்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் புதிய கொள்கையை விளக்கிய அவர், அந்தக் கொள்கையின் மூன்று முக்கியக் கூறுகளை எடுத்துரைத்தார்.
இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குத் தகுந்த பதிலடி அளிக்கப்படும்;பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து முளைத்தாலும், அந்த இடங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது முதல் கூறாகும்.
எந்தவொரு அணு ஆயுத மிரட்டலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது; அணு ஆயுத அச்சுறுத்தல் என்ற போர்வையின் கீழ் உருவாகும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது இந்தியா துல்லியமாகவும், தீர்க்கமாகவும் தாக்குதல் நடத்தும் என்பது இரண்டாவது கூறாகும்.
அரசின் நிதியுதவியைப் பெறும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களையும் வெவ்வேறாக இந்தியா வித்தியாசப்படுத்தி பார்க்காது என்பது மூன்றாவது கூறாகும். அதாவது, பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை யான ஐ.எஸ்.ஐ., அரசு ஆகியவை ஒரே கண்ணோட்டத்தில்தான் இனிமேல் பார்க்கப்படும் என்பதுதான் பிரதமர் அளித்திருக்கும் செய்தி (எச்சரிக்கை).
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரு சேர நடைபெற முடியாது', 'ரத்தமும் தண்ணீரும் சேர்ந்து பாயமுடியாது' என்றார்.
Denne historien er fra May 15, 2025-utgaven av Dinamani Erode & Ooty.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Erode & Ooty
6 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை
தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 4) 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Erode & Ooty
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Erode & Ooty
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Erode & Ooty
ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Erode & Ooty
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Erode & Ooty
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Erode & Ooty
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Erode & Ooty
4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை
தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
1 min
December 04, 2025
Dinamani Erode & Ooty
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
December 04, 2025
Translate
Change font size
