Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

திவ்வியப் பிரபந்த உரைகளில் திருக்குறள்

Dinamani Dharmapuri

|

August 17, 2025

கை நூல்களைக் காட்டிலும் திருக்குறள் ஆட்சியே திவ்வியப் பிரபந்த உரைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழறிந்த எல்லாப் பிரிவினரையும் ஈர்த்தது போலவே வைணவ உரையாசிரியர்கள் மனத்தையும் திருக்குறள் ஈர்த்ததற்கான சான்றுகள் பலப்பல.

- முனைவர் ம.பெ.சீனிவாசன்

தான் கருதிய பொருளுக்குச் சான்றாதாரமாகக் குறளை முழுமையாகக் காட்டுதல், முதற்குறிப்பை மட்டும் சுருங்கச் சுட்டிக் குறள் முழுமையும் நினைவுக்குவரச் செய்து கருத்து விளக்கம் தருதல், கருத்து வாங்கி எழுதுதல், இவ்வாறு எழுதுகிற உரைப் போக்கால் இன்ன குறளை நினைந்து எழுதிய விளக்கம் என்று ஊகிக்கவைத்தல், அந்நாளில் குறளுக்கு வழங்கிய பாடப் பேதங்களைக் காட்டுதல், குறளுக்கு அந்வயம் (கொண்டு கூட்டி) காட்டி மணிப்பிரவாள நடையில் பொருள் கூறுதல், காமத்துப் பால் குறளாயின் தலைவன், தலைவி, தோழி இருவள், அது யார் கூற்று என விளக்குதல் எனப் பல நிலைகளில் திருக்குறள் இவ்வுரைகளில் இடம் பெற்றுள்ளது; எடுத்தாளப்பட்டுள்ளது.

கண்ணனின் பிள்ளைமைக் குறும்புகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பலை ஒரு திருமொழியிற் பாடுவார் குலசேகராழ்வார். அப்பதிகம் முழுவதும் 'சேய்வளர் காட்சியின் சீர்மையை, பெற்ற தாயான தேவகி கண்டு களிக்காத' அவலமே பேசப்பெறும்.

அதில், தண்ணந் தாமரைக் கண்ணனே! கண்ணா (713) எனத் தொடங்கும் ஒரு பாசுரத்தில், தெருவில் நீ புழுதி யாடி வந்து என் மார்பில் பொருந்திடப் பெற்றிலேன்; வண்ணச் செஞ் சிறு விரல்களால் நீ வாரியுண்ட அடிசிலின் மிச்சிலை உண்ணவும் பெற்றிலேன்; ஓ! கொடுவினையேன் என வருந்துகிறாள் ஈன்ற தாயான தேவகி.

இப்பாசுர விளக்கத்தில், அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் (64) மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்று அவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு (65) என்னும் குறட்பாக்களைக் காட்டுகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

இவற்றில் முறையே 'அமுதினும்' (64), 'மற்றவர் தம்' (65) என்பன அவர் கொண்ட பாடமாகவுள்ளன.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

அண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் ‘ஆண்மை ஊர்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘ஆமையூராக' மாறிய தலம், தற்போது ஆம்பூர் என அழைக்கப்படுகிறது. இங்குள்ளது சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும்?

'ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிகழாண்டு இறுதிக்குள் பெரும்பாலும் நிறுத்திவிட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Dharmapuri

வியர்வை சிந்தும் வேலர்!

முருகப்பெருமானைக் காண பாதயாத்திரை மூலமாகவும் மலை ஏறியும் வியர்க்க வியர்க்க வரும் பக்தர்களை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். ஆனால், தன் திருமேனி எங்கும் வியர்வை வழியக் காட்சி தரும் முருகனை சிக்கல் திருத்தலத்தில்தான் தரிசிக்க முடியும்.

time to read

1 mins

October 24, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.92,000-க்கு விற்பனையானது.

time to read

1 min

October 24, 2025

Dinamani Dharmapuri

'ரீல்ஸ்'களுக்குப் பின்னால்...!

பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, இளைஞர்களின் அடையாளம், திறமை, சமூகப் பங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாக உள்ள சமூக ஊடகங்கள் பலரின் வாழ்வில் எதிர்மறை விளைவுகளையே விளைவிக்கிறது. கவனம் ஈர்க்கும் உளவியல் நுட்பத்தில் இசை, உரை, வசனம், பாடல், காட்சித் தொகுப்பு கொண்டு 15-90 விநாடிகளில் உருவாக்கப்படும் 'ரீல்ஸ்' என்ற குறும்பட காணொலி பெரும்பாலானோரை பார்க்கச் செய்கிறது.

time to read

2 mins

October 24, 2025

Dinamani Dharmapuri

செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க கடும் விதிகள்

மத்திய அரசு பரிந்துரை

time to read

1 min

October 23, 2025

Dinamani Dharmapuri

வைக்கம் விருதுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜன் தேர்வு

ஒடுக்கப்பட்டோர் நலனுக்காகப் பாடுபட்டு வருவோருக்கு வழங்கப்படும் தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

time to read

1 min

October 23, 2025

Dinamani Dharmapuri

சென்னை, 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (அக். 23) பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

October 23, 2025

Dinamani Dharmapuri

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.20 கோடி இழப்பு: ஊழல் ஒழிப்புத் துறை வழக்கு

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணிகளால் அரசுக்கு ரூ.20 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, ஒப்பந்த நிறுவனங்கள் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

time to read

1 mins

October 23, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6,500 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த குறுவை பயிர்களும், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா இளம் பயிர்களும் என ஏறத்தாழ 6,500 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

October 23, 2025

Translate

Share

-
+

Change font size