Prøve GULL - Gratis

கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை

Dinamani Dharmapuri

|

April 27, 2025

மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி

சென்னை, ஏப். 26: கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டுமென அதிமுக, விசிக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: பணக்கடன் வழங்குபவர்கள் மற்றும் அடகுக் கடைகளின் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியிலிருந்து மக்களைக் காப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

தமிழ்நாடு அடகுக் கடைகாரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குபவர்கள் சட்டம் 1957, தமிழ்நாடு கந்து வட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது.

ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர், குறிப்பாக விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணைத் தொழிலாளர்கள், கட்டடப் பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் எண்ம முறை (டிஜிட்டல்) உள்பட பல்வேறு வழிகளைப் பின்பற்றும் பணக்கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றனர்.

அத்துடன், கவர்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு உட்படுகின்றனர்.

பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச்சுமையிலிருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக முறையற்ற வழியை நாடுகின்றன.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் புதன்கிழமை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

6 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச. 4) 6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Dharmapuri

உள்ளூர் மொழியறிதல் அவசியம்!

அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.

time to read

2 mins

December 04, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Translate

Share

-
+

Change font size