Prøve GULL - Gratis
இயற்கை விவசாயத்தின் மகுடம் தமிழகம்
Dinamani Cuddalore
|November 20, 2025
'இயற்கை விவசாயம் நமது பாரம்பரியத்தில் பிறந்தது; அதன் தலைமை இடம் என்றால் அது தமிழகம்' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர், ஆர்வலர் கூட்டுக் குழுவின் சார்பில் புதன்கிழமை (நவ. 19) முதல் 3 நாள்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில், பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் 21-ஆவது தவணையாக 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி உதவித் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.
இதில், பிரதமர் மோடி பேசியதாவது: இயற்கை வேளாண்மை இந்தியாவின் இதயத்துக்கு நெருக்கமானது. பொறியியலில் பட்டம் பெற்றவர்களும், இஸ்ரோவில் பணியாற்றி வந்தவர்களும் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருப்பதையும், அவர்கள் மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருவதையும் இங்கு கண்காட்சி அரங்கு அமைத்திருப்பவர்களிடம் உரையாடியதில் இருந்து அறிந்து வியக்கிறேன். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுடன் புத்தொழில் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையமாக மாறும் பாதையில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது. இந்திய வேளாண் துறையில் கடந்த 11 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேளாண் கடன் அட்டைத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
Denne historien er fra November 20, 2025-utgaven av Dinamani Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Cuddalore
Dinamani Cuddalore
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Cuddalore
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Cuddalore
தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் ஒரே ஆண்டில் பாஜவுக்கு ரூ.959 கோடி நன்கொடை
காங்கிரஸுக்கு ரூ.313 கோடி
1 min
December 04, 2025
Dinamani Cuddalore
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Cuddalore
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Cuddalore
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Cuddalore
ஊர்த் தலைவர் கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம், பாப்பாக்குடி அருகேயுள்ள காசிநாதபுரத்தில் கோயில் கொடை விழா தொடர்பான மோதலில் ஊர்த் தலைவர் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
December 04, 2025
Dinamani Cuddalore
ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Cuddalore
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Cuddalore
திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா
பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
1 min
December 03, 2025
Listen
Translate
Change font size
