Prøve GULL - Gratis

உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!

Dinamani Cuddalore

|

September 12, 2025

நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.

- சுவாமி விவேகானந்தர்

செப்டம்பர் 11, 1893 அன்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் உரையாற்றினார். அவர் சர்வ சமயப் பேரவையில் பேசிய முதல் வாக்கியத்திற்கு அரங்கில் இருந்த 4000 பேர் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். இது ஓர் அரிய வரலாற்று உண்மை. முன் பின் தெரியாத ஒருவருக்கு அதுவும் அப்போது அடிமை நாடாக இருந்த இந்தியாவிலிருந்து சென்ற ஒருவருக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தது இந்தியர்களாகிய நமக்குப் பெருமை.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை என்பது உலக தரத்தில் வழங்கப்பட்ட சிறிய, சிறந்த சொற்பொழிவு ஆகும். அந்த உரையில் சுவாமிஜி 3.5 நிமிஷங்கள் மட்டுமே பேசினார். பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளது போல், சிகாகோ உரையில் 18 வாக்கியங்கள் உள்ளன. அந்த உரை 472 வார்த்தைகள் மட்டுமே கொண்டவை.

சுவாமிஜி உரையாற்ற 5 அல்லது 6 நிமிஷங்களே வழங்கப்பட்டிருந்தன. 'சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்' ஆஃப் அமெரிக்கா என்ற அவரது முதல் வாக்கியத்திற்குப் பார்வையாளர்கள் வழங்கிய கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.

அந்த உரையின் இன்னொரு சிறப்பம்சம்; சர்வ சமயப் பேரவையில் சமயத் தலைவர்கள் பலரும் தங்கள் மதத்துப் பெருமையை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தரோ, எல்லா மதங்களின் சாரமாக உள்ள மனிதநேயத்தையும் இறையருளில் அனைவரும் வாழ்வது எவ்வாறு என்பது பற்றியும் உரையாற்றினார்.

அந்த மாநாட்டில் பேசிய பலரும் எங்கள் மதத்தை விட்டால் மக்களுக்கு வேறு கதி இல்லை என்ற வகையில் பேசினார்கள். விவேகானந்தரோ, அனைவரையும் அரவணைக்கும்படி உலக மக்கள் எவ்வாறு இருக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Cuddalore

Dinamani Cuddalore

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Cuddalore

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Cuddalore

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Cuddalore

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size