Prøve GULL - Gratis
எத்தனை, எத்தனை வகையான தலைவர்கள்!
Dinamani Coimbatore
|September 24, 2025
தொகுதி வரையறைச் சட்டத்தை உருவாக்கியவர் மோடியா? அந்தச் சட்டத்தை அம்பேத்கரும், நேருவும், படேலும், அல்லாடி கிருட்டிணசாமி ஐயரும், அரசியல் நிருணய சபையும் ஆராய்ந்து, விவாதித்து சட்டமாக்கி இருக்கிறார்கள்! இதற்கு அரசியல் நிருணய சபை காரணமா? மோடி காரணமா?
உண்மையில் மைய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. முப்பது நாட்கள் ஒரு மந்திரியோ, அவரனையரோ, தலைமையமைச்சர், முதலமைச்சர் உட்பட யாரோ சிறையில் இருக்க நேரிட்டால், அவர் சிறையிருந்த முப்பத்தியொன்றாவது நாளில் பதவியை இழந்து விடுவார்! அந்த வழக்கில் தான் குற்றமற்றவன் என்று விடுதலை பெற்ற பிறகே, அவர் பதவி அரசியலுக்குத் திரும்ப முடியும்!
நாடாளுமன்றத்தில் இது விவாதிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மாற்றுக் கட்சி ஆட்சியினரைப் பழி வாங்கவும், அவர்களை நிலைகுலையச் செய்யவுமே இத்தகைய சட்டங்கள் என்று அவர்கள் கூறினர்!
இது குறித்து எதிர்க்கட்சிகளோடு அலசி விவாதித்து, வேண்டிய திருத்தங்களைச் செய்து, அதை நடைமுறைப்படுத்த, அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கூட்டுக் குழுவில் பங்கேற்பதற்குப் பதிலாக, அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக அந்தக் குழுவைப் புறக்கணித்துள்ளன. இதற்கு ராகுல் காந்தி தலைமை ஏற்றுள்ளார்!
இந்தச் சட்டத்தில் உள்ள முப்பது நாள் மிகக் குறைவான காலக்கெடு என்று தோன்றினாலோ, அதைவிடக் குற்ற நடத்தையாளர் தப்பிக்க முடியாத வகையில் வேறு புது வகைத் திருத்தம் தோன்றினாலோ, அவற்றை முன்வைப்பதற்கு மாறாக, இந்தச் சட்டத்தையே முற்றாக எதிர்ப்பதன் மூலம், எல்லா மாநில ஊழல் ஆட்சிகளையும் முழுமையாகக் காப்பாற்றத்தானே இண்டிக் கூட்டணி வழி வகுக்கிறது!
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் ஒன்றரை ஆண்டுகள் சிறைக்குள்ளேயே முதலமைச்சராக இருந்து பணியாற்றினார்! சிறை என்பது குற்றம் செய்தவர்களின் தண்டனைக்கான இடம். அதைத் தலைமைச் செயலகமாக மாற்றிக் கொள்ளும் நிகழ்கால நிலையில், அதற்குரிய புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றனதானே!
இந்தியக் குற்றவியல் சட்டத்தை உருவாக்கிய மெக்காலேயோ, அதற்குத் திருத்தங்கள் செய்த இந்திய ஆட்சியினரோ, மந்திரிகள் மந்திரிகளாகவே சிறைக்குள் புகுவர் என்று எதிர்பார்க்கவில்லை!
அதைவிட ஒரு படி மேலே போய், குற்ற அடிப்படையில் சிறைக்குப் போனவரை, ஆளும் கட்சி ஒரு மந்திரியாகவே சிறையில் நியமனம் செய்தது. ஆளுநர் மறுத்தபோது, யாரையும் மந்திரியாக்குவது முதலமைச்சரின் முன்னுரிமை என்று சட்டம் பேசுகிறார்கள். அரசியல் சாசனத்தில் தடை இருக்கிறதா என்று எதிர்க்கேள்வி எழுப்பி விமர்சகர்களின் வாயை அடைக்கிறார்கள்.
Denne historien er fra September 24, 2025-utgaven av Dinamani Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Coimbatore
Dinamani Coimbatore
விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...
தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.
2 mins
June 23, 2026
Dinamani Coimbatore
லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.
2 mins
June 23, 2026
Dinamani Coimbatore
குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 mins
June 23, 2026
Dinamani Coimbatore
சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Coimbatore
பெல்ஜியத்துடன் டிரா செய்தது ஈரான்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதிய ஆட்டம், கோல் இன்றி டிராவில் முடிந்தது.
1 min
June 23, 2026
Dinamani Coimbatore
விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு
முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
1 min
June 23, 2026
Dinamani Coimbatore
உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே
உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
June 23, 2026
Dinamani Coimbatore
ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.
1 mins
June 23, 2026
Dinamani Coimbatore
கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை
பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
1 min
June 22, 2026
Dinamani Coimbatore
'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min
June 22, 2026
Translate
Change font size
