Prøve GULL - Gratis

நெரிசலில் சிக்கி போராடிய 111 உயிர்களை காப்பாற்றினோம்

Dinakaran Nagercoil

|

September 30, 2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தைகள், பெண்கள் உள்பட 111 பேரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ளனர். அப்போது தவெகவினர் நடத்திய தாக்குதலில் 2 ஆம்புலன்ஸ் கண்ணாடிகள் உடைந்தது. ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

- சிறப்பு செய்தி

நெரிசலில் சிக்கி போராடிய 111 உயிர்களை காப்பாற்றினோம்

கரூர் பகுதியில் தவெக நடத்திய பரப்புரை கூட்டத்திற்கு காவல்துறை சார்பில் 20 நிபந்தனைகள் வழங்கப்பட்டது. அதில் முக்கியமாக கூட்டம் நடக்கும் பகுதியில் கட்டாயம் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்படி கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கரூரில் கூட்டம் நடந்த பகுதியில் தயாராக 2 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.

தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடக்கும் பகுதியில் 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.40 மணிக்கு தான் வந்தார். இதனால் 10 ஆயிரம் பேர் வரக்கூடிய இடத்திற்கு 27 ஆயிரம் பேர் கூடினர். விஜய் வருவதற்கு தாமதம் ஆனதால் வெகு நேரம் தண்ணீர் இன்றி கால்கடுக்க நின்று இருந்த இளம் பெண்கள் சிலர் கூட்டத்தின் இடையே மயங்கி விழுந்தனர். இதனால் அருகில் இருந்தவர்கள் அவசர உதவி எண் மூலம் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அதேநேரம் கூட்டத்தில் ஏற்கனவே தயாராக தவெக கொடி கட்டி நிறுத்தி வைத்திருந்த ஆம்புலன்ஸ் மயங்கி விழுந்த பெண்ணை மீட்க விஜய் பேசி கொண்டிருந்த போது கூட்டத்திற்குள் வந்தது.

அப்போது பிரசார வாகனத்தின் மீது பேசி கொண்டிருந்த விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை கவனத்தில் கொண்டு, தங்களது கட்சியினர் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் என்றும் கூட தெரியாமல், கூட்டத்திற்குள் நுழைந்த ஆம்புலன்சை பார்த்து, எனது கட்சி கொடி கட்டி ஆம்புலன்ஸ் வருகிறது, அதை பாருங்கள் என்று கிண்டலாக கூறினார்.

அதை பார்த்த தொண்டர்கள் ஆவேசப்பட்டு ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்க முயன்றனர். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் நமது நிர்வாகிகள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் தான் என்று கூறினர்.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு

உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் எஸ்.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கை உள்ளது

கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை

குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 mins

October 09, 2025

Dinakaran Nagercoil

சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி

அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

ஆந்திராவில் கோர சம்பவம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி

ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு

உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட நவிமும்பை விமான நிலையம் திறப்பு

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

time to read

1 min

October 09, 2025

Dinakaran Nagercoil

கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

time to read

1 min

October 09, 2025

Translate

Share

-
+

Change font size