Prøve GULL - Gratis
குப்பை, தண்ணீரை பிரிக்கும் இயந்திரம்
Dinakaran Nagercoil
|September 21, 2025
மழைக்காலம் ... சாலையோர குப்பையை அடித்துக் கொண்டு மழை நீர், ஒரத்துக் கால்வாயை நோக்கியே செல்கிறது. குப்பையுடன், மழைநீரும் சேர்ந்து ரோட்டோரக் கால்வாயில் விழுந்து அடைத்துக் கொள்ள, தண்ணீர் வெளியேற வழியின்றி சாலை முழுக்க நிரம்பி வழியும். இதனால் போக்குவரத்து நெரிசலுடன், விபத்துகளும், தேங்கும் கழிவுகள் தரும் நோய்த் தொற்றுகளும் என பாதிப்புகளின் தீவிரம் அதிகம். இந்நாட்களில் பொதுமக்களுடன், சீரமைக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த துன்பத்தை துடைத்தெறிந்து, எளிதாக கால்வாயைத் தேடி வரும் கழிவுகளின் குப்பையை தனியாகப் பிரித்து, தடையின்றி தண்ணீரை கால்வாயில் ஓட விட்டு 'மந்திரம்' செய்கிற, ஒரு மகத்தான கண்டுபிடிப்பை மதுரை கோரிப்பாளையம் சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
-

தண்ணீருடன் வரும் குப்பைகளை தானாக பிரிக்கும் இந்த, குப்பை - தண்ணீர் பிரிப்பு இயந்திரத்தை வடிவமைத்துள்ள பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர்கள் சையது ஆகில் தாரிக், அர்கான், செந்தமிழ் நிலவன் ஆகியோர் கூறியதாவது:
மதுரை உள்ளிட்ட நகரங்களில் சாலைகளை மேலும் விரிவுபடுத்த முடியாத நிலையே இருக்கிறது. எனவே, மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற சாலையோர கால்வாய் வடிகால்களே உதவுகின்றன. ரோட்டில் வீசப்படும் குப்பைகள் மழைநாட்களில் தண்ணீருடன் கலந்து சாலையோர கால்வாயை நோக்கிச் செல்கின்றன. தண்ணீருடன் குப்பையும் கலந்து வந்து, சாலையோர கால்வாயில் வெளியேற முடியாமல் அடைத்துக் கொண்டு, சாலை முழுக்க தேங்குகிறது. இதில் அத்தனை தரப்பு மக்களும் பெரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இந்த துன்பத்தை பலமுறை அனுபவித்த நிலையில்தான் இதற்கான தீர்வு காணும் ஆசை பிறந்தது. மாணவர்கள் மூவரும் சேர்ந்து பள்ளி முதல்வர் லெட்சுமி, வழிகாட்டி ஆசிரியர் அப்துல் ரஷாக் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலுடன் ஓர் இயந்திரத்தை வடிவமைத்துள்ளோம். மழைக்காலத்தில் குழாய்களை அடைக்கும் குப்பைகளை பிரித்து தண்ணீரை வெளியேற்றும் இந்த இயந்திரத்தை ரூ.2 ஆயிரம் செலவிற்குள் எளிமையாகச் செய்துள்ளோம்.
இரு பகுதி கொண்ட பாக்சின் ஒரு பாதியில் பேட்டரியில் இயங்கும் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். டூவீலருக்கான இந்த மோட்டார், குப்பையுடன் கலந்து வரும் நீரோட்டம் எவ்வளவு இருந்தாலும் அதிவேகத்தில் சமாளிக்கும் திறன்மிக்கது.
Denne historien er fra September 21, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு
உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
விஜய் கூட்டத்தில் 41 பேர் மரணம் எஸ்.ஐ.டி. விசாரணையில் நம்பிக்கை உள்ளது
கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை
குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 mins
October 09, 2025
Dinakaran Nagercoil
சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம் சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி
அணையில் இருந்து அதிக நீர் திறந்ததால் பாதிப்பு
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ஆந்திராவில் கோர சம்பவம் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலி
ஆந்திராவில் நேற்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு
உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
October 09, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் அறிவித்தபடி முதற்கட்டமாக 23 பேருக்கு ரூ.15.50 லட்சம் நிவாரணம்
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட நவிமும்பை விமான நிலையம் திறப்பு
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
1 min
October 09, 2025
Dinakaran Nagercoil
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிரான மனு நாளை விசாரணை
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிபிஐ விசாரணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
1 min
October 09, 2025
Translate
Change font size