Prøve GULL - Gratis
அன்புமணி இல்லையென்றால் இன்று அவர் இல்லை பாமகவை உடைக்க பார்க்கும் அருள் ஒரு அரசியல் வியாபாரி
Dinakaran Nagercoil
|July 02, 2025
அன்புமணிக்கு போட்டியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். வரும் 10ம்தேதி கும்பகோணத்தில் நடக்கும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசுகிறார். அதன்பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
-

பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி மோதல் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. இருவரும் போட்டி போட்டு நிர்வாகிகளை நியமிப்பதும், நீக்குவதுமாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுச்செயலாளர், பொருளாளர் என முக்கிய பதவியில் இருப்பவர்களையே பந்தாடி வருவதால் கட்சி கலகலத்துப்போய் உள்ளது. இரண்டாக பிளவுபட்டு கிடக்கும் கட்சியை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் இருவரும் தீவிரமாக இறங்கி விட்டனர்.
ஆரம்பத்தில் ராமதாசின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்காமல் அமைதி காத்து வந்த அன்புமணி, பனையூரில் கடந்த மாதம் 28ம்தேதி நடந்த சமூக ஊடக பேரவை கலந்தாய்வு கூட்டத்தில் பேசும்போது, 'கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் வயது முதிர்வின் காரணமாக குழந்தைபோல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுயலாபத்திற்காக அவரை பயன்படுத்திக் கொள்கின்றனர். கொள்ளையடிப்பவனுக்கும் கொலை செய்பவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்குகிறார்.
ராமதாஸ் பேட்டியில் கூறுவது அத்தனையும் பொய்' என்றெல்லாம் ஆவேசமாக தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். அன்புமணியின் இந்த பேச்சு ராமதாஸ் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்எல்ஏ அருள், அன்புமணிக்கு பதிலடி கொடுத்தார். அதற்கு அவரைக் கண்டித்து முன்னாள் எம்எல்ஏ கார்த்தி பேட்டி கொடுத்தார். இப்படி இருதரப்பும் மாறி, மாறி தாக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில், அன்புமணி மாவட்டம்தோறும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தி கட்சிக்காரர்களை தன்பக்கம் வளைத்து வருவதுபோல ராமதாசும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க முடிவெடுத்துவிட்டார். அதாவது வருகிற 10ம்தேதி தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் எஸ்.இ.டி. மகாலில் நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் கலந்துகொள்கிறார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், ராமதாசால் புதிதாக பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
Denne historien er fra July 02, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
விஜய் தாமதமாக வந்ததே காரணம்...
முதல் பக்க தொடர்ச்சி
3 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை
ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது
நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம் மூன்றாவது நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
1 mins
October 11, 2025
Dinakaran Nagercoil
மாவட்ட வாரியாக 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
1 mins
October 11, 2025

Dinakaran Nagercoil
குடும்ப தகராறில் மனைவி வேறொருவருடன் ஓட்டம் 3 குழந்தைகளை கழுத்தறுத்து கொடூரமாக கொன்ற தந்தை
தஞ்சாவூர் அருகே பயங்கரம்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஜெயஸ்வால் சத வெடி
வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா
பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
1 min
October 11, 2025
Dinakaran Nagercoil
சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.
1 min
October 11, 2025
Translate
Change font size