Facebook Pixel தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து.... | DINACHEITHI - TRICHY - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து....

DINACHEITHI - TRICHY

|

July 11, 2025

1-ம் பக்கம் தொடர்ச்சி

நிற்கிறது! அவரைப் போலவே - டி.ஆர்.பி.ராஜாவின் உழைப்பாலும், சாதனையாலும் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது! முதலீடுகளும் பெருகுகிறது; வேலைவாய்ப்புகளும் பெருகுகிறது! அனைத்து மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி நிறைந்த மாவட்டங்களாக வளர்ந்து வருகிறது! நிறைவாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், செய்தி, சேனல்களின் வளர்ச்சியை டி.ஆர்.பி ரேட்டை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அதுபோல, நம்முடைய திராவிட மாடல் அரசின் தொழில்துறை வளர்ச்சியை நம்முடைய டி.ஆர்.பி. ராஜா-வின் செயல்பாட்டை வைத்துக் கணிக்கலாம். தன்னை வெற்றிகரமாக நிரூபித்துக் கொண்டிருக்கக்கூடிய தம்பி டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

அவர் மட்டுமல்ல, இந்த மாவட்டத்தின் செயல்வீரராக நம்முடைய பூண்டி கலைவாணன் அவர்கள் நேற்றும், இன்றும் திருவாரூரை திருவிழாவாக்கி என்னுடைய மனதை இனிக்க வைத்திருக்கிறார். தலைவர் கலைஞருக்கு செல்லப்பிள்ளையாக அவர் மறைந்த பின்பு திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு, எந்தப் பொறுப்பை வழங்கினாலும், பொறுப்பாக, சிறப்பாக பணியை முடிப்பவர் சகோதரர் கலைவாணன் அவர்கள். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மோகனச்சந்திரன் அவர்களுக்கும், அவருக்கு துணை நின்ற அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

திருவாரூரை பொறுத்தவரைக்கும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் 22 ஆண்டுகள் ஓடாத ஆழித்தேரை நவீன தொழில்நுட்பத்தில் பக்தர்கள் பரவசம் அடையக்கூடிய வகையில், ஓட்டிக்காட்டியவர். திருவாரூர் மாவட்டத்தை தலைநகரமாக ஆக்கியவர்! ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், திருவாரூர் நகராட்சிக்குப் புதிய கட்டடம், மாவட்ட காவல் அலுவலகம், புதிய பேருந்து நிலையத்திற்கு 2010-இல் அடிக்கல் நாட்டு விழா என அனைத்தும் கலைஞர் அவர்களால் உருவானது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்

மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - TRICHY

சென்னையில் வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி

time to read

1 mins

May 30, 2026

DINACHEITHI - TRICHY

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - TRICHY

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - TRICHY

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - TRICHY

முதல் அமைச்சர் விஜய் உறுதி

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.

time to read

1 mins

May 24, 2026

DINACHEITHI - TRICHY

கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - TRICHY

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுக்கோட்டை முதலிடம்

2025 - 26 ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size