Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் திட்டத்திற்கு மகத்தான வெற்றி : ஜூன் இறுதி வரை முன்பதிவுகள் நீடிப்பு

DINACHEITHI - NELLAI

|

May 28, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னைகொளத்தூர் தொகுதியில் புதிய திட்டமாக முதல்வர் படைப்பகம் என்னும் திட்டத்தை 4.11.2024 அன்று தொடங்கிவைத்தார். இத்திட்டம் பகிர்ந்தபணியிடம் என அப்போது அறிவிக்கப்பட்டது. அது தான் கூட்டுப்பணி இடம் என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.

அதாவது, அமைதியாக ஒருவர் வீட்டில் வசதிகள் இல்லாததால் தனியாகவோ அல்லது தன்னுடைய குழுவினருடனோ அமர்ந்து, குறித்த நேரத்திற்குள் தம்முடைய வேலையைச் செய்து முடித்துக்கொள்ள வேண்டும் என்று கருதினால், அதற்குத் தேவையான இடவசதி, இருக்கைகள், மேசை வசதி, மின் இணைப்பு வசதி, இணைய வசதி, குளிர்சாதன வசதி (AirConditioner), முதலிய அனைத்து வசதிகளுடனும் மிகமிகக் குறைந்த கட்டணத்தில் தனது மடிக்கணினியைப் பயன்படுத்தி கருதிய வேலையைச் செய்து முடித்துக் கொள்வதற்குப் பயன்படும் இடம் இந்த முதல்வர் படைப்பகம்.

இந்தத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மற்ற திட்டங்களைப் போலவே படித்த இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது, அது குறித்த வெற்றிச் செய்தியை 'இந்துஸ்தான் டைம்ஸ்" ஆங்கில பத்திரிகை 26.5.2025 திங்கட்கிழமை அன்று செய்திக் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: சென்னையில் உள்ள அரசு நடத்தும் கூட்டுப் பணி இடத்தில், 22 வயதான பட்டதாரி இளைஞர் ஒருவர் தொடங்கிய இரண்டு மாதமே ஆன சுற்றுலா நிறுவனம், டெக் மகிந்திராவில் ஆட்டோமேஷன் பிரிவின் 52 வயது முன்னாள் தலைவருடன் இடத்தை பகிர்ந்து கொள்கிறார். அவர் ஓய்வுக்குப் பிறகு ஐ.டி. துறையில் தொழில்முனைவராக முயற்சி செய்து வருகிறார். அவருக்கு எதிரே, ஹைப்ரிட் காலத்தில் படுக்கையில் இருந்து வேலை செய்து வந்த Oracle நிறுவனத்தின் நிதி ஆய்வாளர் ஒருவர் இங்கு வந்த பின் (முதல்வர் படைப்பகம்) அதிக உற்பத்தித் திறனுடன் இருப்பதாக உணர்கிறார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - NELLAI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - NELLAI

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்

மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

November 29, 2025

DINACHEITHI - NELLAI

சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - NELLAI

சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

time to read

2 mins

November 29, 2025

DINACHEITHI - NELLAI

நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம்

சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிவக்குமார், ஓவியர் குருசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

time to read

1 mins

November 29, 2025

DINACHEITHI - NELLAI

“உறவினர் பெயர் கட்டாயம் அல்ல” என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவிப்பு

\"எஸ்.ஐ.ஆர், படிவத்தில் தெரிந்த விவரங்களை நிரப்பிக்கொடுத்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறும். உறவினர் பெயர் கட்டாயம் அல்ல\" என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.

time to read

1 min

November 28, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மக்களுக்காக களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும் - உதயநிதிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்

time to read

1 min

November 28, 2025

Translate

Share

-
+

Change font size