Prøve GULL - Gratis
காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு...
DINACHEITHI - DHARMAPURI
|June 17, 2025
ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
-
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி எம். எல். ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி. குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பி. வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இந்த சம்பவத்தில் காவல் துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், நீதிபதி குறிப்பிட்ட நேரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகவில்லை. அதனால், வழக்கை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி முன்னால் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
Denne historien er fra June 17, 2025-utgaven av DINACHEITHI - DHARMAPURI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்
இன்று மினி டைட்டல் பார்க்கை திறந்து வைக்கிறார்
1 min
January 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழக சட்டசபையில் பிப்.2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
1 min
January 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
முதல்-அமைச்சர் அறிவிப்பு
1 min
January 31, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம்
உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
January 30, 2026
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
நடப்பு ஆண்டில் வளர்ச்சி சதவீதம் 7.4 ஆக இருக்கும்
1 min
January 30, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள் நடத்தி இருக்கிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோவில் குடமுழுக்குகள்!
1 min
January 29, 2026
DINACHEITHI - DHARMAPURI
அஜித் பவாரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது: பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரான அஜித் பவார் நேற்று காலை விமான விபத்தில் உயிரிழந்தார்.
1 min
January 29, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
1 min
January 29, 2026
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடி அருகே கடலில் மூழ்கி இறந்த 3 சிறுவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 28, 2026
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்
1 mins
January 28, 2026
Translate
Change font size

