Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

டெல்லி அணியின் காவி திட்டம்....

DINACHEITHI - CHENNAI

|

July 16, 2025

1-ம் பக்கம் தொடர்ச்சி

ஆருயிர் சகோதரர் தொல் திருமாவளவன் அவர்களுடன் நான் இன்றைக்கு அய்யா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறேன். திருமா அவர்கள் சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, சிதம்பரத் தொகுதியின் சீர்திருத்தப் பிள்ளையாக அவர் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு தன்னுடைய எழுத்தால் துணை நிற்கிறார், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ரவிக்குமார் அவர்கள், தனது பேச்சால் துணை நிற்கிறார், சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் சிந்தனைச் செல்வன் அவர்கள். இந்த விழாவிற்கு என்னுடைய அழைப்பை ஏற்று, வருகை தந்திருக்கக்கூடிய சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களும், தோழர் பாலகிருஷ்ணன் அவர்களும், முத்தரசன் அவர்களும், பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன் அவர்களும், கே.எஸ். அழகிரி அவர்களும், வேல்முருகன் அவர்களும், இப்படி எல்லோரும் இங்கே வருகை தந்திருக்கிறார்கள்.

அய்யா இளையபெருமாள் அவர்களுக்காக மட்டுமல்ல, அதற்காக மட்டும் வந்திருப்பதாக நான் கருதவில்லை - நம்முடைய திராவிட மாடல் அரசின் அனைத்து சமூக சீர்திருத்தத் திட்டங்களுக்கு துணையாக இருப்பவர்கள் - இவர்கள் என்பதற்கு வெளிப்படுத்துவதற்கு வந்திருக்கிறார்கள். அதனால், அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த மேடையில், பெரியாரின் வழியில் வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் - மார்க்சிய சிந்தனையை கொண்டிருக்கக்கூடிய பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்கள் - காந்திய வழியில் வந்திருக்கக்கூடிய தேசிய இயக்கத்தின் தலைவர்கள் - அம்பேத்கர் இயக்கத்தின் தலைவர்கள் என்று எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் - இதுதான் ஓரணியில் தமிழ்நாடு. அதைத்தான் திருமாவளவன் அவர்கள் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொன்னார்.

நானும் அதை வழிமொழிகிறேன். உறுதியோடு சொல்கிறேன். தமிழ்நாடு இப்படி ஓரணியில் இருக்கும்போது, எந்த டெல்லி அணியின் காவித் திட்டமும் இங்கே பலிக்காது, பலிக்காது.

பெரியவர் அய்யா இளையபெருமாள் அவர்கள் பள்ளியில் படிக்கும்போதே தீண்டாமையின் அடையாளமாக இருந்த 'இரட்டைப் பானை முறையை' எதிர்த்துப் போராடியவர்! இராணுவத்தில் பணியாற்றியபோது, அங்கும் பாகுபாடு நிலவுவதை பார்த்து, அவருக்கே உரிய துணிச்சலோடு உயர் அதிகாரிக்குப் புகார் அளித்து, அந்தப் பாகுபாடுகளை களைய காரணமாக இருந்தார்!

FLERE HISTORIER FRA DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னையை நெருங்கியது டிட்வா புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 30, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

டிசம்பர் மாதத்தில் 3 மெகா திட்டங்கள்- தமிழக அரசு அறிவிக்கிறது

தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

time to read

1 mins

November 30, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழகத்திற்கு மேலும் 10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைப்பு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாக துணை கமாண்டர் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

November 30, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

time to read

2 mins

November 29, 2025

DINACHEITHI - CHENNAI

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்

மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

November 29, 2025

Translate

Share

-
+

Change font size