Prøve GULL - Gratis

16 கோடி ஊழல்! முடங்கிய யாதவா கல்லூரி! -மதுரை பரபரப்பு!

Nakkheeran

|

July 26-29, 2025

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான யாதவா கல்லூரி தொடர்பாக, கடந்த இரண்டு மாதங்களாக மதுரை நகரெங்கும் '16 கோடி எங்கே?

- அண்ணல்

16 கோடி ஊழல்! முடங்கிய யாதவா கல்லூரி! -மதுரை பரபரப்பு!

கொள்ளைபோகிறது யாதவர் சமுதாயத்தின் சொத்து! பின்னணியில் அமைச்சர்கள்! பேராசிரியர்கள், நிர்வாகிகள் நீக்கம் ஏன்? திவாலாகும் நிலையில் கல்லூரி! அரசே முழு விசாரணை தொடங்கு!' என்ற போஸ்டர்கள் நகரெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சர் ஒருவரின் சம்பந்தியான கே.பி.எஸ். நவநீதகிருஷ்ணனுக்கும், ஜெ. காலத்து அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்குமிடையே, யாதவா கல்லூரி நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை, நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்நிலையில், மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம், யாதவா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் கல்லூரி செயற்குழு உறுப்பினர்களான வழக்கறிஞர் கோபி, வழக்கறிஞர் கேசவன் தலைமையில் புகார் கொடுத்தனர். இவ்விவகாரம் குறித்து கல்லூரியின் செயற்குழு உறுப்பினரான குணசேகரனிடம் பேசினோம்.

“1962-ல், யாதவா கல்லூரி கல்வி நிதி சங்கம் என்று ஆரம்பிக்கப்பட்டது. மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் கோனார் சமுதாய இளைஞர்களை உயர் கல்வியின் பக்கம் திரும்பவைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டு, 1968ல் முதல்வராக இருந்த அண்ணா அடிக்கல் நாட்டினார்.

அடுத்து வந்த கலைஞர், யாதவா கல்லூரியை நடைமுறைக்கு கொண்டு வர உறுதுணையாக இருந்தார்.

யாதவா கல்வி நிதி சங்கத்தின் செயலாளராக நாகேந்திர கண்ணன் இருந்தார். அவருக்கு பிறகு, 2003 - ல் தி.மு.க.வை சேர்ந்த ஏ.ஆர்.சந்திரன் பொறுப்புக்கு வர, 2007-ல் அவர் மறைவுக்கு பிறகு 2008-ல் நான்தான் யாதவா கல்வி நிதி சங்க செயலாளர் என்று, பதிவுத்துறை மற்றும் அரசு ஆணையை காண்பித்து அமைச்சர் ஒருவரின் சம்பந்தியான கே.பி.எஸ் நவநீதகிருஷ்ணன் பதவியேற்றார்.

இதை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் நந்தகோபால், கல்வி நிதி தொடர்பாக நாகேந்திர கண்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கு விசாரணையில், யாதவா கல்லூரியில் செயலாளராக இருப்பது சட்டவிரோதமானது என்று 2013-ல் தீர்ப்பு வர, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் கே.பி.எஸ் நவநீதகிருஷ்ணன்.

FLERE HISTORIER FRA Nakkheeran

Nakkheeran

Nakkheeran

திலீப் விடுதலை... பகீர் பின்னணி!

8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!

கொதிக்கும் ஐ.பி.!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

யார் கெத்து? பலியான மாணவன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!

நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

நிறைவேற்றப்படாத வேண்டுதல்!

‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி என் 9658

ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!

-மக்கள் மனநிலை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

அம்மா போட்ட குண்டு?

மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.

time to read

3 mins

December 13-16, 2025

Nakkheeran

அடக்கி வாசிக்கும் விஜய்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.

time to read

2 mins

December 13-16, 2025

Translate

Share

-
+

Change font size