Prøve GULL - Gratis

DINACHEITHI - NELLAI - June 27, 2025

filled-star
DINACHEITHI - NELLAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - NELLAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

I dette nummeret

June 27, 2025

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலியிடத்திற்கு நியமனம்: விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள்

விருதுநகர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜபுரம் ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 18,000என்ற மாத தொகுப்பூதியத்தில் மற்றும் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15,000என்ற மாத தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 mins

மாமனாரை தாக்கிய மருமகள் உள்பட இருவர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சோந்தவா கோவிந்தன் (வயது 74), ஓய்வுபெற்ற பேரூராட்சி உதவியாளா. இவரது இளைய மகன் வெங்கடேஷுக்கும் (36), குஞ்சாண்டியூரை சோந்த ராமசாமி மகள் அபிராமிக்கும் திருமணம் நடைபெற்றது. மதுப்பழக்கம் உள்ள வெங்கடேஷ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கோவிந்தன் வீட்டுக்குச் சென்ற அவரது மருமகள் அபிராமி, அவரது தங்கை சுகந்தா இருவரும் வெங்கடேஷ் பெயரில் உள்ள சொத்துகளை அபிராமி பெயரில் மாற்றித்தரும்படி கேட்டுள்ளனா. அப்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரை தொல்லை கொடுக்கக் கூடாது என்று கோவிந்தன் கூறியுள்ளார்.

1 mins

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவி முதலிடம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) ஆகிய இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பம் பெறப்பட்டன. நடப்பாண்டில், வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு அரசு கல்லூரிகளில் 2,516 இடங்களும் மற்றும் தனியார் கல்லூரிகளில் 4,405 இடங்களும் என மொத்தம் 6,921 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: விழுப்புரம் மாணவி முதலிடம்47

1 mins

தொழில் தொடங்கிட கடனுதவி

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதியதாக தொழில் முனைவோரை உருவாக்கிடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் (CM-ARISE) மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.10லட்சம் வரை கடனுதவி ரூ.3.50 லட்சம் அல்லது 35சதவீத மானியத்தொகையுடனும், PMAJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.1லட்சம் வரை கடனுதவி ரூ.50,000அல்லது 50 சதவீத மானியத்தொகையுடனும் கடனுதவி வழங்கப்படுகிறது.

1 mins

Nylige utgaver

Relaterte titler

Populære kategorier